search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக வழக்கு"

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
    • பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு, ஓ.பி.எஸ்.சி.ன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு கூறினார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் முன்பு முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ஓ.பி.எஸ். மனு மட்டும் பட்டியலிடப்பட்ட நிலையில் மற்ற 3 பேரும் முறையிட்டதால் 4 பேரின் வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (30-ந்தேதி) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது.
    • சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் தான் ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த விசாரணை அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அவரது கையெழுத்திட்ட வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.

    இதேபோன்று மத்திய அரசு சார்பிலும் 2 முறை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அங்கீகாரமாகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் 4-ந்தேதி நடைபெற உள்ள விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்பதால் யாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்? யாருடைய கை ஓங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இருவருமே சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    இருப்பினும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பதே இப்போது எழுந்துள்ள மிகபெரிய கேள்வியாக உள்ளது.

    • சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் அதிகாரிகள் நியமனம்.
    • சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்.

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி விசாரிக்கும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ×