search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை
    X

    ஓ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    • ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு, ஓ.பி.எஸ்.சி.ன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு கூறினார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் முன்பு முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ஓ.பி.எஸ். மனு மட்டும் பட்டியலிடப்பட்ட நிலையில் மற்ற 3 பேரும் முறையிட்டதால் 4 பேரின் வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (30-ந்தேதி) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×