search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகல் விளக்குகள்"

    • ஆலங்குடி பகுதியில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்
    • கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவதிலும், பாரம்பரிய முறைப்படி அதில் எண்ணை ஊற்றி, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது

    இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதிகளில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு வியாபாரம் சூடு பிடித்தது. இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகல் விளக்கு தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்ட போதிலும் அதிக அளவில் அகல் விளக்குகள் வாங்குவதில் மக்கள் காட்டும் ஆர்வம் விற்பனையையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    தொடர் மழையால் மிகக்குறைந்த அளவே அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வருடங்களில் ரூ.10-க்கு 15 விளக்குகள் வரை வழங்கப்பட்டன. ஆனால் இவ்வாண்டு ஐந்து அல்லது ஆறு விளக்குகள் வழங்கப்படுகிறது.

    அகல் விளக்குகளில் மெழுகு விளக்குகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் மரபுப்படி களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் களிமண் அகல் விளக்குகளை வாங்குவது இத்தொழில் ஈடுபட்டிருக்கும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றுவதற்கு ஒப்பாகும் என்பதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இன்று தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று மழையூர், துவார், வாடிமனைபட்டி, மாங்குடி ஆகிய ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலங்குடி கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
    • ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன.

    கடலூர்:

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்தன. கார்த்திகை மாதத்தில் தீப திருநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி வீடுகள், கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு. இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாள் வருகிற 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம், மஞ்சகுப்பம், செம்மண்டலம், திருப்பாதி ரிப்புலியூர் மற்றும் சன்னதி தெரு, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கடைகளிலும் வைத்து அகல் விளக்குகள் விற்கப்படுகிறது. சாலை ஓரங்களில் வியாபாரிகள் அகல் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் அகல் விளக்குகள் தயாரி க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தயாராகும் அகல் விளக்குகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''கார்த்திகை தீப திருவிழாவுக்கு தற்போது அகல்விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளது பெரிய வியாபாரிகளிடம் சிறு வியாபாரிகள் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் அளவுக்கு தகுந்தாற்போல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதே அகல் விளக்குகள் தற்போது ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதனையும் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தீப திருநாளுக்கு முந்தைய நாட்களில் அகல்விளக்கு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

    • பல வடிவங்களில் விற்பனைக்காக அகல் விளக்குகள் தயாராகின்றன.
    • கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் புதுக்கோட்டை திருச்சி கரூர், தர்மபுரி, ஈரோடு,மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் பாலமுருகன் கூறியதாவது:-

    இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக குடும்பத்துடன் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அடுப்பு, பானை, சட்டி, அகல் விளக்குகள் அருகாமையிலுள்ள ஓட்டக்குளம் மற்றும் சானாதி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து பலவிதமாக அகல் விளக்குகளை நாங்கள் தயாரித்து வருகின்றோம்.

    இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட லாபம் கிடைக்கவில்லை, போதிய வருமானம் இல்லாத போதிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வரை தயாரிப்போம் , எங்களிடம் சில்லரை மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

    எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி நிதி உதவி, உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டும் மேலும் இந்தப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின் திருவை அனைவருக்கும் வழங்கவேண்டும் ஏரியில் மாட்டுவண்டி மூலம் மண் எடுக்க அரசு உதவிவிட வேண்டும் என்றும்கூறினார் இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விரைவில் கார்த்திகை தீபம் வர இருப்பதால் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 'அகல் விளக்குகள்' தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப் படும் கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக, மக்கள் தயாராகி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ள வேலூர் சூளைமேடு, காகித பட்டறை, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு, மேலகுப்பம், ஒடுக்கத்தூர், பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் கார்த்திகை தீபத் திருவிழா வர இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது 'அகல் விளக்குகள்' தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம். இதுேபால் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி உடுமலை பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

    அகல் விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அகல் விளக்குகள் வண்ண ரகங்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • வண்ண வடிவ அகல் விளக்குகள் பொதுமக்களை கவருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சாலையோர பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளது.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் அடுத்து வரவுள்ள கார்த்திகை தீபவிழா ஆகியவற்றுக்கு வீடுகளில் தீப ஒளியேற்றுவதற்காக அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து தயாரான அகல் விளக்குகள் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது.

    இதையொட்டி சென்னை சாலையோர கடைகளில் விதவிதமான பல்வேறு வகையான அகல்விளக்குகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்காக சிறப்பு வண்ண அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்து உள்ளன.

    சென்னையில் கொசப்பேட்டை புரசைவாக்கம், வடபழனி, பெரம்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. அகல் விளக்குகள் வண்ண ரகங்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்குகளை ஏராளமான பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். வண்ண வடிவ அகல் விளக்குகள் பொதுமக்களை கவருகின்றன.

    கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெறும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    ×