search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல வடிவங்களில் விற்பனைக்கு தயாராகும் அகல் விளக்குகள்
    X

    பல வடிவங்களில் விற்பனைக்கு தயாராகும் அகல் விளக்குகள்

    • பல வடிவங்களில் விற்பனைக்காக அகல் விளக்குகள் தயாராகின்றன.
    • கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் புதுக்கோட்டை திருச்சி கரூர், தர்மபுரி, ஈரோடு,மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் பாலமுருகன் கூறியதாவது:-

    இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக குடும்பத்துடன் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அடுப்பு, பானை, சட்டி, அகல் விளக்குகள் அருகாமையிலுள்ள ஓட்டக்குளம் மற்றும் சானாதி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து பலவிதமாக அகல் விளக்குகளை நாங்கள் தயாரித்து வருகின்றோம்.

    இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட லாபம் கிடைக்கவில்லை, போதிய வருமானம் இல்லாத போதிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வரை தயாரிப்போம் , எங்களிடம் சில்லரை மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.

    எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி நிதி உதவி, உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டும் மேலும் இந்தப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின் திருவை அனைவருக்கும் வழங்கவேண்டும் ஏரியில் மாட்டுவண்டி மூலம் மண் எடுக்க அரசு உதவிவிட வேண்டும் என்றும்கூறினார் இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×