search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weighing"

    • முத்திரையிடப்படாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.

    மதுரை

    தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணைபடியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து, தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலா யுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி, மகாலட்சுமி ஆகியோர் மானாமதுரை வாரச்சந்தையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-8, விட்டத்தராசு -10. இரும்பு எடைகற்கள்-34 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-6 ஆக மொத்தம் 65 எடைய ளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தி னால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப் பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    ×