search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்திரையிடப்படாத எடையளவைகள் பறிமுதல்
    X

    முத்திரையிடப்படாத எடையளவைகள் பறிமுதல்

    • முத்திரையிடப்படாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.

    மதுரை

    தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணைபடியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து, தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலா யுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி, மகாலட்சுமி ஆகியோர் மானாமதுரை வாரச்சந்தையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-8, விட்டத்தராசு -10. இரும்பு எடைகற்கள்-34 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-6 ஆக மொத்தம் 65 எடைய ளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தி னால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப் பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த தகவல்களை சிவகங்கை மாவட்ட தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்தார்.

    Next Story
    ×