search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "various schemes"

    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது.
    • விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரை பாண்டியன் வரவேற்றார்.

    பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள்

    திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரி மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவு யாற்றினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி முன்னாடி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார். தமிழகத்தை பார்த்து காலை சிற்றுண்டி திட்டம் சில மாநிலங்களில் செயல்பட தொடங்கி விட்டன. வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்ட சத்துகளை வழங்கு வது, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்குவது, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கியது, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் முறைப்படி பெண்களுக்கு சென்ற டைகிறதா? என்று தனிக் கவனம் செலுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    காலை உணவுத் திட்டம்

    இதை போல அரசு பள்ளியில் காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் கல்லூரி வரை சென்று படிப்பதற்கு அரசு உதவித்தொகை இப்படி தமிழக மக்களுக்கு தினசரி ஒரு புது திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தமிழக மக்களாகிய நாம் என்றும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இதில் உடன்குடி யூனியன் ஆணையாளர்கள் ஜான்சி ராணி, சுடலை, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவ லர் பிரபா, உடன்குடி பேரூ ராட்சி தலைவர் ஹீமைரா ரமீஸ் பாத்திமா, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீரா சிராசுதின், உடன்குடி பேரூ ராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ், பேரூராட்சி கவுன்சி லர்கள் ஜான் பாஸ்கர், மும்தாஜ் பேகம், அன்பு ராணி, சர ஸ்வதி பங்காளன், பாலாஜி, ஆபித், பஷீர், பிரதிப் கண்ணன், சபானா, ராஜே ந்திரன், மாநில தி.மு.க., வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன், மூத்த தலைவர் வெற்றிவேல், ஜெயராமன், தி.மு.க. கிளைச் செயலாளர் முகமது சலீம், தங்கம், முருகன். முகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வை யாளர் மலர்கொடி சுகிர்தா நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அந்த வகையில் சங்கரன்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதி 32 ஆண்டுகளாக அ.தி.மு.க. வசம் இருந்து வந்த தொகுதி ஆகும்.

    தி.மு.க. வெற்றி

    அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்ற சங்கரன்கோவில் தொகுதியில், கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். இதனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வசமானது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சங்கரன்கோவில் தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டு வருகிறார்.

    பல்வேறு திட்டங்கள்

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, சட்ட மன்றத்தில் தொகுதிக்கான தேவைகளை எடுத்துக்கூறி பேசி வருகிறார். மேலும் தேவையான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி அமைச்சர்களிடமும் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில், அமைச்சர் இதனை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் சங்கரன்கோவில் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நான்கு வழிச்சாலையாக தரம்உயர்வு

    அந்த வகையில் சங்கரன்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளில் நெடு ஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    சங்கரன்கோவில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு என்.ஜி.ஓ. காலனி ெரயில்வே கேட் முதல் திருவேங்கடம் சாலை சந்திப்பு வரை உள்ள மாநிலச் சாலையில் புறநகர் போக்குவரத்து பெருக்க த்தை கருத்தில் கொண்டு 2 வழிச்சாலையாக இருந்த சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்

    மேலும் 2021-2022-ம் நிதியாண்டில் சங்கரன்கோவில் தேரோடும் தெற்கு ரத வீதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் திட்டம் தொடக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.

    மேலும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வரை செல்லும் மாவட்ட முகமை சாலையில், சங்கரன்கோவில் தற்காலிக பஸ் நிலையம் முதல் உமையத்தலைவன்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் இருவழிதடமாக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டது.

    அகலப்படுத்தும் பணிகள்

    வரும் நிதியாண்டில் ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் வழியாக நெல்லை செல்லும் மாநில சாலையில் திருவேங்கடம் சாலை சந்திப்பு முதல் அரசு மருத்துவமனை வரையும், சங்கரன்கோவிலில் இருந்து கழுகுமலை செல்லும் மாநில சாலையில் சங்கரன்கோவில் அக்கினி காளியம்மன் கோவில் முதல் தற்காலிக பஸ் நிலையம் வரை நகர்ப்புற மேம்பாட்டு 2022 -2023-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறையால் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்த வரை தற்போது ராஜா எம.எல்.ஏ. முயற்சியால் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகி ன்றது. இதனால் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
    • இலவவச சைக்கில் வழங்கும் நிகழ்ச்சி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில் 1,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவர விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பள்ளிக்கு சென்று வருவதால் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. இதுபோன்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி ஆர்வத்தினை தூண்டுவது மட்டுமல்லாமல், கல்வியில் இடைநிற்றலையும் தவிர்க்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    எங்கள் அரசால் நாட்டு மக்களின் வங்கி கணக்குகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். #PravasiBharatiyaDiwas #Modi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி நகரில் ‘பிரவசி பாரதிய திவஸ்’ (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.

    இந்தியா இன்று பல்வேறு அம்சங்களில் உலகத்துக்கு தலைமையேற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். இதன்மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே ஆற்றல் பகிர்மானம் என்னும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான். நமது ஆற்றல் மற்றும் திறமைகளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மொரீஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்ற நாடுகளின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

    மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை போய் சேர்வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருந்தார்.  அப்படி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ஒரு ரூபாயில் 85 பைசா கொள்ளையடிக்கப்பட்டது. இதை தடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

    ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலையை மாற்றியுள்ளோம். கொள்ளைக்கான கதவுகள் அடைக்கப்பட்டது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றது.



    அவ்வகையில், கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில்  பல்வேறு திட்டங்களின்கீழ் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் எங்கள் அரசால் போடப்பட்டுள்ளது. பழைய பாணியிலேயே இந்த நாட்டின் ஆட்சி நடந்திருக்குமானால்  இந்த 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயில்  4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்நேரம் மாயமாகிப் போயிருக்கும் என்றும் மோடி தெரிவித்தார். #PravasiBharatiyaDiwas #Modi
    ×