search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "University Vice Chancellor"

    • பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
    • ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என்றார் அமைச்சர் பொன்முடி.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

    மேலும், துணைவேந்தரை தேர்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    • முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைப்பு.

    சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

    முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீட் தேர்வு மட்டுமின்றி புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்க்கிறோம்.
    • திராவிட ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்- பதிவாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் தலைமை செயலாளர் இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினார்கள். இறுதியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நாட்டின் சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் 19 பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன. திராவிட ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாற்ற வேண்டும்.

    தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும். வெறும் வேலைவாய்ப்பு தருவது மட்மே உயர்கல்வியின் நோக்கமல்ல. கல்வித்தரம் உயர்வதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை உயரும்போது கல்வியின் தரம் குறைகிறது என்ற வாதத்தை ஏற்கமாட்டேன்.

    தொழில் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது. நீட் தேர்வு மட்டுமின்றி புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக கவர்னர் பன்வாரி புரோகித் சூழ்நிலை வரும்போது துணைவேந்தர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையாக விளக்கம் அளிப்பார் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும், பலகோடி ரூபாய் பணம் இதில் புரண்டு உள்ளதாகவும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கவர்னரின் குற்றச்சாட்டு பற்றி தக்கலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவர்னர் கூறி உள்ளார். சூழ்நிலை வரும்போது கவர்னர் அது பற்றி வெளிப்படையாக கூறி விளக்கம் அளிப்பார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் பற்றி கேரள தேவசம் போர்டு மந்திரியிடம் பேசி உள்ளேன்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தால் கேரளா-தமிழக உறவு பாதிக்கப்படாது. சுவாமி அய்யப்பனை முழுமையாக உணர்ந்த பெண் பக்தர்கள் யாரும் சபரிமலை செல்ல மாட்டார்கள். நானும் அய்யப்பப் பக்தன்தான். சிறு வயதில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்று வருகிறேன். இந்த பிரச்சினையில் களங்கம் ஏற்பட்டால் அதை நான், ஏற்க மாட்டேன்.

    தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு காரணம் மழை எச்சரிக்கை தான். விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்தித்த விவகாரத்தில் பாரதிய ஜனதா பின்னால் நின்றும் இயக்கவில்லை. முன்னால் நின்றும் இயக்கவில்லை. இது அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இடையே நடைபெறும் பங்காளி சண்டை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×