search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer time"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பெங்களூர்:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இதை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ரூ.1800 முதல் ரூ.2ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

    இதுகுறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறும்போது, பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர்களை மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    மேலும் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எனது துறை மானியத்தில் இருந்து ஏற்கனவே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுதொடர்பான சிறப்பு கூட்டம் இன்று மதியம் நடத்தப்படும் என்றார்.

    இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அனுமதி இன்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • தலையணையில் குளிக்க தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • தற்போது தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டுகிறது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது களக்காடு மலைப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் வெப்பம் நிலவுகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டு கிறது. இந்த தண்ணீர் 10 நாட்களில் முழுவதும் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிவார்கள். இந்தாண்டு அடுத்த மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில் தலையணையில் தண்ணீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கோடை காலம் தொடங்குவதையொட்டி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
    • முடிவில் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோடை காலம் தொடங்குவதை யொட்டி மாவட்ட அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

    இதனை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மேற்கு மாவட்ட பொரு ளாளர் முரளி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் குமார், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், முகம்மது அனஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வடமாநில தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

    வேலூரில் 101.7 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

    வேலூர்:

    கோடைகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தும். இதனால் பொதுமக்கள் கோடைகாலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த வருடம் கோடைகாலம் முடிந்தும் வேலூரில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 100 டிகிரியும், நேற்று 101.7 டிகிரியும் வெயில் பதிவானது.

    இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×