search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalaiyanai"

    • தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்று சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடை யே தலைய ணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை தலையணை நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து ள்ளனர். 23 நாட்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேன்டீன் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
    • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் நடவடிக்கையின் பேரில் தலையணையில் வனத்துறை சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டது.

    அருங்காட்சியகம்

    இங்கு ஐஸ்கிரீம், டீ, காப்பி, குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகளும் குளித்து விட்டு, உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். கேண்டீனில் விற்பனையும் அதிகரித்து வந்தது.

    அதுபோல அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது. இதில் வனவிலங்குகளின் மாதிரிகள், அவைகளின் சத்தம் எழுப்பும் கருவிகள், பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து இன்புற்றனர்.

    மீண்டும் திறக்க வலியுறுத்தல்

    இதனிடையே கொரோனா தடை உத்தரவால் கடந்த 2018-ம் ஆண்டு கேன்டீனும், அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக இதுவரை கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைவதுடன், கட்டிடமும் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.

    எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தலையணையில் குளிக்க தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • தற்போது தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டுகிறது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது களக்காடு மலைப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் வெப்பம் நிலவுகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டு கிறது. இந்த தண்ணீர் 10 நாட்களில் முழுவதும் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிவார்கள். இந்தாண்டு அடுத்த மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில் தலையணையில் தண்ணீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×