என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைக்கச்சேரி"

    • Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.
    • இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.."

    அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.

    கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.

    அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதையடுத்து, Astronomer நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் தலைவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சமீபத்தில், அந்தத் தரம் பூர்த்தி செய்யப்படவில்லை" என்று தெரிவித்தது.

    சர்ச்சையை அடுத்து, தனது பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளார். ஆண்டி பைரனின் ராஜினாமா கடிதத்தை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

    இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால CEO ஆக செயல்படுவார் என்றும் Astronomer அறிவித்துள்ளது.  

    • Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.
    • கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார். கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.

    அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்த தேதி மாற்றம் யுத்தத்தின் காரணமாக மாற்றி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    கோவை புதூரில் வரும் 17-ந்தேதி நடைபெற இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி அடுத்த மாதம் 7-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது:-

    பேரன்புமிக்க ரசிகர் பெருமக்களே... வருகிற 17-ந்தேதி கோவையில் நடைபெற இருந்த என்னுடைய இசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 7-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் இந்த மாற்றம் என்று நீங்கள் கேட்கலாம்..

    உங்களுக்கே தெரியும்... நாடு தற்போது இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் தள்ளி வைத்துள்ளோம். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்த தேதி மாற்றம் யுத்தத்தின் காரணமாக மாற்றி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.. வணக்கம்.

    • 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த நிகழ்வை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரு கச்சேரியின் அளவிலான நிகழ்வை ஒழுங்கமைப்பது மிகவும் சிக்கலான பணியாகும். இது தளவாடங்கள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முதல் போக்குவரத்து மேலாண்மை வரை பல நகரும் பகுதிகளை உள்ளடக்கியது. துரதிர்ஷ்டவசமாக, நிறுவன தவறுகள் உட்பட பல காரணங்களால், கூட்ட நெரிசல் மற்றும் பிற எதிர்பாராத சிக்கல்கள் இதுபோன்ற அளவிலான கச்சேரிகளின் போது நடந்துள்ளன.

    நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி சிந்திப்பது முக்கியம், கலைஞர்கள் என்ற முறையில், நாங்கள் இந்த தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். எல்லாமே சீராக நடக்கவும், நாங்கள் மேடையில் இருக்கும்போது எங்கள் ரசிகர்கள் நன்றாகக் கவனிக்கப்படுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை வெளிவருவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது, மேலும் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.
    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரி வரவேற்பை பெற்றது.

    பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக்குழுவான கோல்ட் பிளே[Coldplay] 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' என்ற தலைப்பில் வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்தது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.

    பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்திருந்தன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

    இந்நிலையில் கோல்ட் பிளே கச்சேரிகளைச் சிலாகித்துள்ளார். இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அவர் கூறினார்.

    நாட்டில் இசைக்கச்சேரி பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாநில அரசுகளும், தனியார் துறையும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார்.

    புவனேஸ்வரில் நடந்த ஒடிசா கான்க்ளேவ் 2025 நிகழ்ச்சியில் பேசிய மோடி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ட்ப்ளே கச்சேரிகளின் அற்புதமான படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்தியாவில் நேரடி கச்சேரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

     

     உலகெங்கிலும் உள்ள பெரிய கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளின் போக்கு அதிகரித்துள்ளது என்றார்.

    அடுத்ததாக 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக கோல்ட் பிளே குழு ஹாங் காங் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×