என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்புவனம்"

    • கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
    • பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அஜித்குமாரின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மறைந்த காவலாளி அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் விஜய் சம்பவம் குறித்து கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும், வறுத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

    • காவலாளி அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது.
    • 2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார்.

    சென்னை:

    திருப்புவனம் சம்பவம் தொடர்பாக 5 போலீசார் மீது மட்டுமே தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளில் போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். டி.எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் பெற்று அதிரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

    காவலாளி அஜித் குமாரை கண்மூடித்தனமாக தாக்குவதற்கு உத்தரவிட்டது யார்? என்பது போன்ற கேள்விகளை முக்கியமாக கேட்டு விசாரிக்க உள்ளனர்.

    இந்நிலையில் காவலாளி அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.

    மேலும் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011-ல் நிகிதா மீது FIR உள்ளது.

    2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியது தெரியவந்துள்ளது.

    • ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம்.
    • நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.

    இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். இது யாராளும் மன்னிக்க முடியாதது. பெற்ற தாய்க்கு மட்டுமே அதன் வலி தெரியும்.

    உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மனம் நிம்மதியுடன் இருப்பார்கள்.

    நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    மனம் தளராமல் இருங்கல். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×