என் மலர்
நீங்கள் தேடியது "வரி ரத்து"
- சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
- உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.
இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த புதிய வரி விலக்கு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக டிரம்ப் கூறுமபோது," காபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என்றார்.
உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது.
இந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ வரியை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.
மதுரை
மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் முத்துக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் மற்றும் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்க ராஜ், சில்வர் சிவா, ஜெயக்குமார், கண்ணன், குட்டி அந்தோணிராஜ், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
'டெஸ்ட் பர்ச்சேஸ்' வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், மற்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், வாகன விதி மீறல் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல் நடவடிக்கையை தடுக்க வேண்டும்,
மின் கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகிய எரிபொருட்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், மற்ற சுங்க சாவடியில் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.
- பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.
- சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய இறக்குமதி வரி கட்டமைப்பை அரசு நீட்டிக்கவில்லை.
புதுடெல்லி:
பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதைப்போல 2022 பிப்ரவரி முதல் வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த சலுகைக்கான கால வரம்பு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த இறக்குமதி வரி ரத்து மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரி விலக்கு ஆகியவற்றுக்கான கால அவகாசம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உள்நாட்டில் சீரான வினியோகம் மற்றும் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
அதேநேரம் சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய இறக்குமதி வரி கட்டமைப்பை அரசு நீட்டிக்கவில்லை.






