என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high prices of food items"

    • சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
    • உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

    இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.

    இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    இந்த புதிய வரி விலக்கு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுமபோது," காபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என்றார்.

    உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது.

    இந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றில் 5 ரூபாய் பாப்கார்னை 250 ரூபாய்க்கு விற்பதாக கூறி தியேட்டர் மேனஜரை நவநிர்மான் சேனா தொண்டர்கள் அடித்து, உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#MNS #Pune
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டங்களின் விலை தாறுமாறாக உள்ளதாக கூறி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், புனே நகரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் இன்று நேற்று புகுந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், உணவுப்பொருட்களின் விலையை குறைக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் ஏன் குறைக்கவில்லை என தியேட்டர் மானேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொண்டர்கள் மானேஜரை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதல் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் நிர்வாகி கிஷோர் ஷிண்டே, “5 ரூபாய் பாப்கார்ன் 250 ரூபாய்க்கு விற்கின்றனர். ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டினால், அதற்கு, மராத்தி தெரியாததால் பேப்பர் படிக்கவில்லை என மானேஜர் கூறினார். இதனால், எங்களது ஸ்டைலில் இந்த விஷயத்தை டீல் செய்தோம்” என கூறினார். 


    ×