என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து மோதல்"
- பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
- நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றில் விளையாடும் முனைப்பில் களமிறங்குகின்றன.
இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் துவக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இப்போட்டியில் விளையாடுகிறார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின
- இப்போட்டியில் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - கில் ஜோடி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு ரன்களை சேர்த்தனர். கிட்டத்தட்ட 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை நெருங்கிய நிலையில், அக்சர் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்னிலும் ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 249 ரன்கள் எடுத்தது.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா?
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதை முனைப்பில் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
அந்த வகையில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் காணலாம்.
- இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐ.சி.சி.-யின் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை ஒரு போட்டியில் கூட டாஸ் வென்றதில்லை. அந்த வகையில், இந்திய அணி இறுதிப் போட்டியில் டாஸ் வெல்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மனம்திறந்து பேசியுள்ளார்.
அப்போது, "என்னை பொருத்தவரையில், இந்திய அணி டாஸ் வெல்ல கூடாது. அவர்கள் தோற்க வேண்டும் என்று தான் நான் கூறுவேன், நியூசிலாந்து அணி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும். இது இந்தியாவை தந்திர சூழலில் தள்ளும். இந்தியா இதுவரை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது, வெற்றிகரமாக பந்துவீசியும் இருக்கிறது."
"தனிப்பட்ட முறையில், நான் இந்தப் போட்டி 54-46 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கிறேன். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அணி," என்று தெரிவித்தார்.
- இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
- 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி டாசில் தோற்றது.
- தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலும் இந்திய அணி டாசில் தோற்றது
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 15 முறை டாசில் தோற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
2023-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி முதல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 12 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:
இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 12 (நவம்பர் 2023 - மார்ச் 2025)
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)
- முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- அப்போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அப்போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், காயம் காரணமாக மேட் ஹென்றி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நேத்தன் ஸ்மித் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் மேட் ஹென்றி விளையாடாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் நடப்பு சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மேட் ஹென்றி (10 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வில் யங் - ரச்சின் ரவீந்திரா ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
- ரச்சின் ரவீந்திராவை விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இதனை எதிர்த்து ரவீந்திரா முறையீடு செய்ய 3 ஆவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
உடனடியாக அடுத்த பந்தை ரவீந்திரா தூக்கி அடித்தார். இந்த கடினமான கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயஸ் தவறவிட்டார். ஒரே ஓவரில் 2 முறை தாவீந்திரா தப்பித்தார். ஆனால் அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக வில் யங் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப், வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். தற்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
- இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார்.
- 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. டாம் லாதாம் - மிட்செல் ஜோடி தற்போது நிதானமாக விளையாடி வருகின்றனர்.
- டாம் லதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
- பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது.
- சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து சிறப்பாக விளையாடியது.
இப்போட்டியில் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா தூக்கினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் - பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த பிலிப்ஸ் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் - பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த மிட்செல் 63 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிரேஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 51 ரன்கள் அடித்தார்.






