என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் பீதி"

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஆசனூர் அருகே கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டை ஆடி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசனூர் சோதனை சாவடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் சென்ற குதிரையை துரத்த தொடங்கியது. சிறுத்தையை பார்த்து பயந்து குதிரை ஓட தொடங்கியது. ஆனால் சிறுத்தை விடாமல் சென்று துரத்தி அந்த குதிரையை தாக்கி கழுத்தில் கடித்து கொன்றது. பின்னர் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் குறிப்பாக குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் இனியும் தாமதிக்காமல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது.
    • நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த அருள்வாடி புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.

    யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது. அந்த பகுதியில் உள்ள நேதாஜி சர்க்கிள் என்னும் இடத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளது.

    இதுவரை கிராமத்துக்குள் புகுந்த யானை தற்போது முதல் முதலாக தாளவாடி ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சானமாவு காட்டுப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டதால் வனப்பகுதிக்குக்குள் யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

    இதில் 10 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளால் சானமாவு காட்டு பகுதியை சுற்றியுள்ள சானமாவு, ஆழியாலம், போடூர், ராமாபுரம், பார்த்த கோட்டா, காமன்தொட்டி, கோபச்சந்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த காட்டுப்பகுதியில் யானைகளுக்கு சரியான தீவனம் இல்லாததால் எந்த நேரமும் கிராமங்களுக்குள் புகுந்து விடலாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வனப்பகுதிக்கு யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

    பேரணாம்பட்டில் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரத்திற்குட்பட்ட உள்ளி வனப்பகுதியையொட்டி உள்ளி, பரவக்கல், பொகளூர், செம்பேட்டு, வளத்தூர், பட்டு வாம்பட்டி, சிங்கல்பாடி, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்லலக்குப்பம் காப்புக்காடு அருகிலேயே இருப்பதால், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள், உள்ளி வனப்பகுதிக்குள் புகுந்து சுற்றி திரிகின்றன.

    இப்படி சுற்றித்திரியும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், வனப்பகுதியை சார்ந்துள்ள உள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை கொடூரமாக கடித்து வேட்டையாடி கொல்கின்றன. இதனால் கிராம மக்கள் எப்போதும் அச்சமுடன் இருக்கின்றனர்.

    வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும், விறகு சேகரிக்கவும் செல்ல தயங்குகின்றனர். வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்கள் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், உள்ளி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளி கிராமத்தை சேர்ந்த 2 பேர் இன்று காலை வனப்பகுதியை ஒட்டி சென்றனர். அப்போது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. பீதியடைந்த அவர்கள், ஒரு பாறை அருகில் இருந்த புதரை எட்டி பார்த்தனர். 2 குட்டிகளுடன் ஒரு பெரிய தாய் சிறுத்தை படுத்திருந்தது.

    இதையடுத்து, உடனடியாக அவர்கள் கிராமத்திற்குள் ஓடி சென்று தகவல் கொடுத்தனர். சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள், வீதியில் விளையாடிய குழந்தைகளை உடனடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை உள் பக்கமாக பூட்டி தஞ்சமடைந்தனர். கோழி, ஆடு, மாடுகளை பாதுகாப்பாக பட்டியில் அடைத்தனர்.

    இதுப்பற்றி பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். சிறுத்தை நடமாடிய பகுதியை பார்வையிட்டனர். அதில், உள்ளி கிராமத்தில் இருக்கும் ரெயில்வே பாலம் அருகே உள்ள புதரில் குட்டிகளுடன் சிறுத்தை பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த பாலம் அருகில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. பள்ளிக்கு இன்று மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். எனவே, சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே திருமுறுக்கல் என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் முக்கிய சாலையாகும். இந்த வழியாக பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அந்த வனப்பகுதியில் ஒரு வாரமாக 15 யானைகள் இரவு பகலாக சுற்றித்திரிகின்றன. மேலும் யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைக்கு வருகின்றன. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து சாலையோரம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    மேலும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். அஞ்செட்டி வனச்சரகர் தனபால் கூறுகையில் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் கிராமமக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம். யானைகள் நடமாட்டம் குறித்து கிராமமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹாரன்கள் அடித்தும், முகப்பு விளக்கை எரியவிட்டும் செல்லவேண்டும். யானைகள் வரும் பகுதியை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எச்சரித்தார். 
    ×