search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers Fear"

    • காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
    • கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசோலை அருகே மாங்கா மரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை யானை முற்றுகையிட்டது. பாப்புட்டி என்ற பெண்ணின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த பாப்புட்டி, அச்சத்தில் சத்தம் போட்டார். அப்பகுதி மக்கள் வந்து காட்டு யானையை விரட்டினர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி அருகே பேபி நகரில் மற்றொரு காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சரித்து போட்டு தின்றது.

    இதில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பேபி நகர் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    நேற்று மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வீடு மற்றும் விவசாய பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தி வருவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, காட்டு யானைகள் நடமா ட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

    நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அங்கு சில வீடுகளை சேதப்படுத்தியது.

    மேலும் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    பேரணாம்பட்டில் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரத்திற்குட்பட்ட உள்ளி வனப்பகுதியையொட்டி உள்ளி, பரவக்கல், பொகளூர், செம்பேட்டு, வளத்தூர், பட்டு வாம்பட்டி, சிங்கல்பாடி, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்லலக்குப்பம் காப்புக்காடு அருகிலேயே இருப்பதால், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள், உள்ளி வனப்பகுதிக்குள் புகுந்து சுற்றி திரிகின்றன.

    இப்படி சுற்றித்திரியும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், வனப்பகுதியை சார்ந்துள்ள உள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை கொடூரமாக கடித்து வேட்டையாடி கொல்கின்றன. இதனால் கிராம மக்கள் எப்போதும் அச்சமுடன் இருக்கின்றனர்.

    வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும், விறகு சேகரிக்கவும் செல்ல தயங்குகின்றனர். வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்கள் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், உள்ளி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளி கிராமத்தை சேர்ந்த 2 பேர் இன்று காலை வனப்பகுதியை ஒட்டி சென்றனர். அப்போது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. பீதியடைந்த அவர்கள், ஒரு பாறை அருகில் இருந்த புதரை எட்டி பார்த்தனர். 2 குட்டிகளுடன் ஒரு பெரிய தாய் சிறுத்தை படுத்திருந்தது.

    இதையடுத்து, உடனடியாக அவர்கள் கிராமத்திற்குள் ஓடி சென்று தகவல் கொடுத்தனர். சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள், வீதியில் விளையாடிய குழந்தைகளை உடனடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை உள் பக்கமாக பூட்டி தஞ்சமடைந்தனர். கோழி, ஆடு, மாடுகளை பாதுகாப்பாக பட்டியில் அடைத்தனர்.

    இதுப்பற்றி பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். சிறுத்தை நடமாடிய பகுதியை பார்வையிட்டனர். அதில், உள்ளி கிராமத்தில் இருக்கும் ரெயில்வே பாலம் அருகே உள்ள புதரில் குட்டிகளுடன் சிறுத்தை பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த பாலம் அருகில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. பள்ளிக்கு இன்று மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். எனவே, சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×