search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு சுவரை இடித்து யானைகள் அட்டகாசம்
    X

    வீட்டு சுவரை இடித்து யானைகள் அட்டகாசம்

    • காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
    • கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசோலை அருகே மாங்கா மரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை யானை முற்றுகையிட்டது. பாப்புட்டி என்ற பெண்ணின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த பாப்புட்டி, அச்சத்தில் சத்தம் போட்டார். அப்பகுதி மக்கள் வந்து காட்டு யானையை விரட்டினர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி அருகே பேபி நகரில் மற்றொரு காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சரித்து போட்டு தின்றது.

    இதில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பேபி நகர் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    நேற்று மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வீடு மற்றும் விவசாய பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தி வருவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, காட்டு யானைகள் நடமா ட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

    நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அங்கு சில வீடுகளை சேதப்படுத்தியது.

    மேலும் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    Next Story
    ×