என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants Camp"

    • வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத்திற்கு குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன.

    இந்த காட்டு யானைகள் மருதமலை அடிவாரம், பாரதியார் பல்லைக்கழகம், ஐ.ஓ.பி.காலனி, யானை மடுவு உள்ளிட்ட பகுதியிலேயே 2 நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

    நேற்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதுபற்றிய தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலம் வருகின்றன.

    மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் அந்த யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.

    தேன்கனிக்கோட்டை:

    கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.

    அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.

    காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சானமாவு காட்டுப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டதால் வனப்பகுதிக்குக்குள் யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

    இதில் 10 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளால் சானமாவு காட்டு பகுதியை சுற்றியுள்ள சானமாவு, ஆழியாலம், போடூர், ராமாபுரம், பார்த்த கோட்டா, காமன்தொட்டி, கோபச்சந்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த காட்டுப்பகுதியில் யானைகளுக்கு சரியான தீவனம் இல்லாததால் எந்த நேரமும் கிராமங்களுக்குள் புகுந்து விடலாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வனப்பகுதிக்கு யாரும் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

    ×