search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raj babbar"

    • இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக லக்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.
    • இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராஜ்பாப்பர் தெரிவித்துள்ளார்.

    லக்னோ :

    பிரபல இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்புகள் வகித்துள்ளார். 3 முறை மக்களவை எம்.பி மற்றும் 2 முறை மாநிலங்களவை எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பாப்பர் போட்டியிட்டார். அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடி ஒன்றில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து அவரை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக லக்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில், லக்னோவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் கடந்த நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராஜ்பாப்பர் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பருக்கு மொராதாபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 21 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.

    இந்த 21 வேட்பாளர்களில் 16 பேர் உத்தரபிரதேசத்துக்கும் 5 பேர் மராட்டியத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சுசில்குமார் ஷிண்டே, ஸ்ரீபிரகாஷ், பிரியாதத், ராஜ்பப்பர் ஆகியோர் முக்கியமானவர்கள். சுசில்குமார் ஷிண்டேக்கு சோலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபிரகாசுக்கு கான்பூர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பிரியாதத்துக்கு மும்பை வடக்கு மத்திய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சுனில்தத் 5 முறை தேர்வான இந்த தொகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது மகள் பிரியாதத் வெற்றி பெற்று இருந்தார்.

    இதை கருத்தில் கொண்டு பிரியாதத்துக்கு அதே தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே இந்த தடவை வேறு தொகுதியில் அவரை களம் இறக்க ராகுல்காந்தி முடிவு செய்தார்.

    அதன்படி ராஜ்பப்பருக்கு மொராதாபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று இருந்தது. எனவே இந்த தொகுதியை ராஜ்பப்பருக்கு ராகுல்காந்தி வழங்கி உள்ளார்.

    காங்கிரஸ் சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 11 வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    நேற்று 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காங்கிரஸ் கட்சி 38 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பிரபலமான மூத்த தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நானா படோல், ராஜ் பாப்பர், பிரியா தத் உள்ளிட்ட 21 பேர் கொண்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் போட்டியிடும் 21 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 16 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பேரும் அடங்குவர்.

    இதில், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் நானா படோலும், வடக்கு மத்தியில் பிரியா தத்தும், உ.பி.யின் மொராதாபாத் தொகுதியில் ராஜ் பாப்பரும், பஹ்ரெய்ச் தொகுதியில் சாவித்ரி புலேவும் போட்டியிடுகின்றனர என தெரிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    உத்தப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் நிர்வாக அமைப்புகளை கலைத்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உத்தரவிட்டுள்ளார். #UPCongress #RajBabbar
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக அமைப்புகளை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் இன்று கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில நிர்வாக அமைப்பு மற்றும் நிதி் விவகார அமைப்புகளில் பதவி வகித்த சிலரையும் அவர் நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஆர்.பி. திரிபாதி வெளியிட்டார்.

    அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, கலைக்கப்பட்ட இடங்களில் திறமையான புதிய நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கலைக்கப்பட்ட உ.பி. மாநில ஊடக அமைப்பு கடந்த இரண்டு மாதமாகவே செயல்படாத நிலையில் இருந்துவந்தது. அதில், 21 பேர் செய்தி தொடர்பாளர்களாக பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #UPCongress #RajBabbar
    ×