search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway tunnel"

    • போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    • இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய பகுதிகளில் ெரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் ரெயில்வே கேட் வழியாக போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

    இதனால் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய இடங்களில் ரெயில்வே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, சுரங்க பாதை அமைக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் லட்சுமியாபுரம் -நுர்சாகிபுரம் இடையே ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

    இந்த வழியாக நுர்சா கிபுரம், இடைய பொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணிய புரம், துலக்கன்குளம், கங்காகுளம், கண்ணார்பட்டி ஆகிய ஊர்களுக்கு பஸ், வாகனங்கள் சென்று வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக லட்சுமியாபுரம் ெரயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் உள்ளது.இதனால் வாகனங்கள், பொதுமக்கள் சுரங்க பாதையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படு கின்றனர். இதனால் அங்கு தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற கோரி அந்த பகுதி பொதுமக்கள் நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் 6 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தண்ணீரில் சிக்கி அரசு பஸ் பழுதடைந்ததால், தண்ணீர் தேங்கி நிற்கும்போது பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.

    வட்டாட்சியர் செந்தில் குமார், இன்ஸ் பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் இங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை கேட்டுக்கொண்ட அதிகாரி கள் தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப் படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

    • பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.
    • மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.

    இதனால் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பழுதாகி வருகின்றன. மேலும் பைக்கில் செல்பவர்கள் விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

    மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளிலும் இதே நிலைமை உள்ளது.

    ரெயில்வே நிர்வாகத்தினர் சுரங்கப்பாதைகளை முறையாக பராமரிப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகள், கிராமமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    • நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் .
    • கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கபாதை வழியாக கண்ணமநாயக்கனூர், மருள்பட்டி , அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . இப்பகுதி மக்கள் உடுமலை வந்தடைய முக்கிய சாலையாக ெரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் சரியான மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இன்று ஒரு வாரம் ஆகியும் தேங்கியுள்ள மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது . தற்போது தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அப்படியே உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வழியை பயன்படுத்தி வரும் மக்கள் அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது.
    • 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் ரெயில்வே சுரங்க நடைபாதை உள்ளது. இந்த பாதை நகரின் வடக்கு, தெற்கு பகுதி மக்களை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தோல்வியடைந்ததால் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் வெகு தொலைவு சென்று தேவையான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழநியாண்டவர் நகர், ஜீவா நகர், தாண்டாகவுண்டன்தோட்டம், காந்திபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாதை முடக்கப்பட்டுள்ளதால், நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×