search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டியில் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு
    X

    குடியானகுப்பம், சோமநாயக்கன்பட்டியில் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு

    • போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    • இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய பகுதிகளில் ெரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் ரெயில்வே கேட் வழியாக போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

    இதனால் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய இடங்களில் ரெயில்வே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, சுரங்க பாதை அமைக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×