search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்
    X

    குளம் போல் மழை நீர் தேங்கியுள்ள காட்சி.

    கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்

    • நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் .
    • கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கபாதை வழியாக கண்ணமநாயக்கனூர், மருள்பட்டி , அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . இப்பகுதி மக்கள் உடுமலை வந்தடைய முக்கிய சாலையாக ெரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் சரியான மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இன்று ஒரு வாரம் ஆகியும் தேங்கியுள்ள மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது . தற்போது தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அப்படியே உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வழியை பயன்படுத்தி வரும் மக்கள் அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×