search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PinarayiVijayan"

    இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதமுகம் கொண்ட போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று துவக்கி வைத்தார். #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் மனித போலீஸ் ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன், பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இது இந்தியாவிலேயே முதல் போலீஸ் ரோபோ ஆகும்.  

    இந்த ரோபோ காவல் நிலையத்தின் வரவேற்பறையில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வரும் மக்களை சல்யூட் அடித்து வரவேற்று, காவல் நிலையத்தில் அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல வழி காட்டுவது ரோபோவின் முக்கிய பணி ஆகும்.



    இந்த ரோபோ, காவல்நிலையத்தின் தரத்தை உயர்த்தவும், சேவையை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நிரந்தரமாக அந்த காவல் நிலையத்திலேயே பணிபுரியும் என கூறப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு, மக்களின் குறைகளை களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் தற்போதைய ரோபோக்கள், தகவல்களை சேகரிப்பது,  சேகரித்த தகவல்களை பராமரிப்பது, சென்சார் கொண்டு தகவல் அறிவது, கண்காணிப்பது போன்ற பல தேவைகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மனிதர்களை போல இயங்கும் திறன் இந்த ரோபோக்களுக்கு உள்ளது என ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.  #PinarayiVijayan #KeralaCM #HumanoidpoliceRobot
    சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு தென் மாநில தேவசம் மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்து உள்ளார். #Sabarimala #PinarayiVijayan
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

    இந்த நாட்களில் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்கு தடை செய்யப்பட்ட வயதை சேர்ந்த பல பெண்கள் முயன்றனர். ஆனால் சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மொத்தம் 12 பெண்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசு, அங்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த போராட்டங்கள் தொடர்பாக 450 வழக்குகள் பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இது தொடர்பாக 1400-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது.

    இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து மாநில பா.ஜனதா போராட்டங்களில் இறங்கி இருக்கிறது. நேற்று காலையிலும் பத்தனம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி பா.ஜனதா தொண்டர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளுக்காக கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ளனர்.

    எனவே அங்கு செய்ய வேண்டிய பணிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தென் மாநிலங்களை சேர்ந்த தேவசம் மந்திரிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்து உள்ளார்.

    சாமி தரிசனத்துக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பின்பற்றப்படும் ஆன்-லைன் முன்பதிவு முறையை சபரிமலையிலும் செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

    எனினும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படாது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே மண்டல பூஜைக்காக தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தேவசம்போர்டுக்கு மாநில அரசு அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதாவினர், மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக அமைதியான முறையிலும், சட்ட ரீதியாகவும் போராடப்போவதாக அறிவித்து உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் உலகப்புகழ் பெற்ற சபரிமலையை மாநில அரசு போர்க்களமாக மாற்ற முயல்வதாக பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். #Sabarimala #PinarayiVijayan 
    டெல்லியில் இன்று பினராயி விஜயன் தங்கியிருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். #PinarayiVijayan

    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லி சென்றார். அங்குள்ள கேரள விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார்.

    காலை 7.30 மணிக்கு அவர் பொலிட் பீரோ கூட்டத்துக்கு புறப்பட்டார். அவரை பேட்டி காண கேரள விருந்தினர் மாளிகை முன்பு ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.

    அப்போது நபர் சந்தேகத்துக்கு இடமாக நிற்பதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். அவர்களை அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் கைப்பையில் கத்திவைத்திருந்தார். அந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டினார். மேலும் பினராயி விஜயனை சந்திக்க அனுமதிக்க வேண்டும், அவர் எனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவரை சந்திக்க அனுமதிக்க விட்டால் தற்கொலை செய்வேன் என மிரட்டினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபர் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரது பெயர் விமல்ராஜ், கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட பகுதியில் நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    உயரதிகாரியின் மகளால் தாக்கப்பட்ட கடைநிலை காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் துறையில் இனி எடுபிடி வேலைக்கு ஆள் கிடையாது என கேரள முதல்வர் உறுதியளித்துள்ளார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போலீஸ் ஆயுதப்படை பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர் கவாஸ்கர் என்பவர் அப்துல் கறீம் கவாஸ்கர் என்பவர் ‘ஆர்டலி’யாக பணி செய்துவந்தார். 

    கார் டிரைவராகவும் ஏ.டி.ஜி.பி-யின் மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரம் நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது அவர்களின் அருகே காரை கொண்டு செல்ல சற்று கால தாமதமானதால் கவாஸ்கரை கூடுதல் டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா திட்டியிருக்கிறார். 

    தொடர்ந்து, கவாஸ்கர் காரை ஒட்டிச் சென்றபோதும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஸ்நிக்தா செல்போனால் தாக்கியதில் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட  கவாஸ்கர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    தன்னை ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கியதாக கவாஸ்கர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை ஏற்றுக்கொள்ளாமல் ஏ.டி.ஜி.பி-யின் மகள் கொடுத்த எதிர்புகாரின் அடிப்படையில் மியூஸியம் காவல்நிலையத்தில் கவாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, கவாஸ்கருக்கு ஆதரவாக காவலர் நலச் சங்கம் தலையிட்டதால் ஏ.டி.ஜி.பி மகள் மீது பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து ஏ.டி.ஜி.பி சுதேஷ் குமார் மற்றும் கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவலர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலையிட்டதைத் தொடர்ந்து ஸ்நிகிதாவின் தந்தை சுதேஷ்குமார், ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் ஆர்டலிகளின் பட்டியல் மற்றும் வாகனங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கேரள சட்டசபையில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளித்த முதல் மந்திரி பினராயி விஜயன், போலீஸ் துறையில் இருந்து இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கே. சபரிநாதன் என்பவரின் கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், உயரதிகாரிகளின் வீடுகளில் கடைநிலை காவலர்களை வேலைக்கு அனுப்பும் பழக்கம் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. இழிவான இந்தப் பழக்கம் கேரள மாநிலத்தில் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    காவல்துறை என்பது கட்டுப்பாடான அமைப்பாகும். ஆனால், கட்டுப்பாடு என்னும் பெயரில் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. அரசின் உத்தரவை மீறி நடந்துகொள்ளும் உயரதிகாரிகள் யாரானாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பினராயி விஜயன் உறுதியளித்தார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    ×