search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paranthaman MLA."

    • திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
    • தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது.

    சென்னை:

    எழும்பூர் தொகுதி தி.மு.க. எம். எல். ஏ. இ.பரந்தாமன் சட்டசபையில் பேசுகையில், திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மகளிருக்கான விடியல் பயணத்திட்டத்தை கர்நாடகா பின்பற்றுகிறது. காலை உணவு திட்டத்தை தெலுங்கானா பின்பற்றுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் மருத்துவ கட்டமைப்பை குஜராத் மாடல் ஆட்சி நடக்கும் மாநிலத்தவர் கூட இங்கு வந்து பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தல் வாக்குறுதிகளும் கூட திராவிட மாடல் ஆட்சியின் நகல்களாக இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு விடியல் ஏற்படும். அதுவும் முதலமைச்சர் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியினால் ஏற்படும். தமிழ்நாட்டிற்கு விடியலை தந்த உதயசூரியன் நம் தலைவர் ஆர்.எஸ்.எஸ்-பாஜக என்னும் இருளை விரட்டியடிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252-வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. எழும்பூர் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகுதுரை, துணை அமைப்பாளர் விஜயபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர் மற்றும் காவல் கிளி, ஜலால், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×