என் மலர்

    நீங்கள் தேடியது "Minister KKSSR Ramachandran"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அரசாணை எண்.279-ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது எனவும், கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
    • யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சென்னை:

    முதன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பதவிக்காக கட்சி மாறி, அமைச்சராகியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையை குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரான அம்மாவை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மழை வெள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சென்னையை தவிர வேறு எங்கும் மழைநீர் தேக்கம் என்பது இல்லை. இதுவரை 138 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 68 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலைமைகளை கேட்டு வருகிறோம். நகராட்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட அளவில் கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.

    முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மழையில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் 5,100 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மணலிக்கு 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த 19,547 பேர், மரம் அறுக்கத்தெரிந்த 15,912 பேர், பாம்பு பிடிப்பவர்கள் 3,117 பேர், கால்நடை பாதுகாப்பிற்கு 19,535 பேர் என சுமார் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மட்டும் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கடலில் மீன்பிடிக்க சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. ஏரிகளில் பகல் நேரத்தில் மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், ஆணையர் நாகராஜன், மேலாண்மை இயக்குனர், சுப்பையன் உடன் இருந்தனர்.


    ×