search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் புதிய வழித்தடத்தில் பஸ் சேவை - அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    புதிய பஸ் சேவையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    புளியங்குடியில் புதிய வழித்தடத்தில் பஸ் சேவை - அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • புளியங்குடியில் இருந்து இதுநாள் வரையில் நேரடி பஸ் திருவனந்தபுரதிற்கு இருந்து இல்லை.
    • திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் சேவையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ,வியாபாரிகள் தினமும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்று வருகிறார்கள். இதுநாள் வரையில் நேரடி பஸ் திருவனந்தபுரதிற்கு இப்பகுதியில் இருந்து இல்லை. நேரடி பஸ்சை இயக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், வடக்கு மாவட்ட செயலாளாட ராஜாவிடம் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று வாசுதேவநல்லூரில் இருந்து புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் சேவையை வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ராஜா, சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், நகர செயலாளர் அந்தோணிசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×