search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor policy abuse"

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார்.
    • முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கவிதாவுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிபதி கவேரி பேவேஜா முன்னிலையில் அமலாக்கத் துறையால் (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட கவிதாவின் காவலையும் நீதிபதி நீட்டித்தார்.

    அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடிக்கும் மேல் பணமோசடி நடந்துள்ளது. இதில் வழக்கில் சிக்கிய 'இண்டோஸ் பிரிட்ஸ்' நிறுவனம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கையூட்டாக தந்த ரூ.100 கோடி, நிறுவனம்தின் லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.192.8 கோடி என மொத்தம் ரூ.292.8 கோடி கவிதாவுக்குத் தொடர்புடையதாகும்.

    வழக்கில் உள்ள தொடர்புகள் மற்றும் தனது ஈடுபாட்டை மறைப்பதற்கு, கைப்பேசிகளில் இருந்த எண்ம ஆதாரங்களை கவிதா அழித்துள்ளார். கைப்பேசியிலுள்ள தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை' எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
    • அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் உருவாக்கிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

    நேற்று இவ்வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் மதுபான கொளகை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சி பெயரை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுபான கொள்கையால் ஆம்ஆத்மி கட்சி பலன் அடைந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதைடுத்து டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஆம்ஆத்மி கட்சியை குற்றம் சாட்ட முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.

    ×