search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kathua"

    காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். #Pakistan #India #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே உள்ள ஹிராநகர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை 11 மணி அளவில் சிறிய ரக ஆயுதங்களால் இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

    கடந்த 2 வாரமாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளான பூஞ்ச், ரஜோரி செக்டர் பகுதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  #Pakistan #India #JammuKashmir 
    ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி ஜெயா(வயது 45). இவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி சார்பில் கடந்த மாதம் புதிதாக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா கடந்த 22-ந் தேதி தனது ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா? என்பதனை ஏ.டி.எம். மையத்தில் சோதனை செய்து வருமாறு அருகே வசிக்கும் அறிவழகன் மகன் அன்பழகனிடம்(27) கொடுத்துள்ளார்.

    அவரும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் சோதனை செய்து விட்டு ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்று ஜெயாவிடம் கொடுத்து விட்டு சென்றார். இதையடுத்து ஜெயா தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சம்பவத்தன்று பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் உங்கள் வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ.40 ஆயிரம் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயா சம்பவத்தன்று அன்பழகனிடம் தான் ஏ.டி.எம். கார்டை கொடுத்தோம். அவர் தான் பணத்தை எடுத்திருப்பார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பழகன் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஏ.டி.எம். மையத்துக்கு பணத்தை திருட வந்த கொள்ளையர்கள் பணத்தை திருட முடியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். #ATMMachine #Robbery
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் வழியாக ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சான் ரோரியன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று வந்த கொள்ளையர்கள் சிலர், அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, அந்த எந்திரத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 400 இருந்ததாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

    போலீசார், ஏ.டி.எம். எந்திரத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.  #ATMMachine #Robbery 
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த சட்டவிரோதமான காப்பகத்தில் இருந்து 19 குழந்தைகளை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஆண்டனி தாமஸ் சிறுவர்கள் காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, அந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் 21 குழந்தைகள் இருந்துவந்ததாகவும், அதில் 2 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    8 சிறுமிகள் உட்பட 19 பேரை மீட்ட போலீசார், அந்த காப்பகத்தின் உரிமையாளரான ஆண்டனி தாமஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த காப்பகம் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் தாமஸ் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.

    இந்நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஆண்டனி தாமஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #JammuKashmir
    ×