என் மலர்

    நீங்கள் தேடியது "karur court"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளித்தலை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கைத்தறி நெசவாளர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ந் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    பாதிக்கப்பட்ட அச்சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் கூறினால். இதனால் அதிர்ச்சிடைந்த அச்சிறுமியின் பெற்றோர், இது பற்றி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரத்தை கைது செய்தனர். 

    மேலும் சுந்தரம் மீது கரூர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க.பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார்.

    இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் தலித்பாண்டியன், கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-2ல் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் பலமுறை ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா கிறிஸ்டி, வருகிற 23-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018, ஜூலை 19-ந்தேதி முதல் 6 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலித் பாண்டியன் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்றும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே)மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வழக்கில் எஸ்.வி. சேகர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராகவில்லை.

    இந்தநிலையில் அவர், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்ததற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சியின்(அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வருகிற 23-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். #SVeShekher
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் 20-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #svsekar
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று எஸ்.வி.சேகர் கோர்ட்டுக்கு வரவில்லை.

    அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தில்குமார் வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற 20-ந் தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #svsekar
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் ஜூலை மாதம் 5-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.#SVESekar
    கரூர்:

    சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டியளித்தபோது, பெண் நிருபர் ஒருவரது கன்னத்தை தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார்.

    இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    இதன் முதல்கட்ட விசாரணை கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அப்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். #SVESekar
    ×