search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industrial park"

    • 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் எதிர்ப்பு.
    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

    அன்னூர்:

    கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.

    இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். மேலும் போராட்டக்குழு சார்பில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்து.

    அதன்படி இன்று காலை அக்கரை செங்கப்பள்ளியில் இருந்து விவசாயிகள் தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கிய விவசாயிகள் நடை பயணம் கரியானூர், சோளவாம்பாளையம், ஆலங்குட்டை, குழியூர் வழியாக வடக்கலூரில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நடைபயணத்தின் போது கிராம மக்களிடம் இதுகுறித்து விரிவாக எடுத்து கூறினர்.

    நடைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களை எடுக்கமாட்டோம் என்ற அரசின் அறிவிப்பில் தெளிவு இல்லை. எனவே விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை பாதுக்காக வேண்டும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.அனைத்து விவசாய சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே விவசாயிகள் நடைபயணம் பற்றி அறிந்ததும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
    • பவானி ஆற்றின் உயிரோடு விளையாடும் இந்த தொழில்பேட்டை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

    கோவை

    எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயமும், விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    தொழில் பூங்காவை கடந்த ஆட்சியில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டபோது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பவானி ஆற்றின் உயிரோடு விளையாடும் இந்த தொழில்பேட்டை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி நன்றாக உள்ளது. எனவே தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள், வேலைவாய்ப்பு தேவைப்படும் மாவட்டங்களில் இது போன்ற திட்டங்களை கொண்டு வரலாம். எனவே அன்னூர் பகுதியில் இந்த தொழில் பூங்காவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

    • இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது.
    • வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் குறித்தும், புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் வண்ணார்்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

    சபாநாயகர் பேட்டி

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இது தவிர உள்ளூரில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் மூலமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது. 12 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ. 2 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் அதாவது ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

    குறு, சிறு, நடுத்தர தொழிலில் இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவில் வழங்கு வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு எப்படி அதிக அளவில் வேலை வாய்ப்பினை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். மேலும் முன்னணி வங்கிகளில் கடன் உதவி எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.

    வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    வள்ளியூரில் அரசு நிலத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ளது. இங்கு தொழில் நிறுவனங்கள் அமைக்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரை அழைக்க உள்ளோம்.

    இது தவிர வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட இடங்களில் வீட்டு வசதி மேம்பாடு மூலமாக வள்ளியூரில் 504 வீடுகளும், பணகுடியில் 468 வீடுகளும் கட்டுவதற்கு அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தொடங்கும்.

    வருகிற 6-ந்தேதி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும், கிராமப்புற மாணவர்கள் கலந்து கொள்வதற்கு கூடுதல் பஸ் வசதிகள் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கிறார்கள். இதன் மூலமாக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×