search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in POCSO"

    • ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், கோவர்த்தனன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாவரை போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வசந்தபுரம் அருகே உள்ள நடந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தனசேகரன் (வயது 23) கூலித் தொழிலாளி. இவர் பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஊர்நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அதைதொடர்ந்து, பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாக தனசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தனசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    • இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கார்த்திக்(வயது 22). கல் அறுக்கும் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர். இதை தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

    • போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
    • அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

    இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    ×