என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gundaas Act"
- பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
- முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ரகூப் (வயது 22), அல்தாப் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை திருப்பூர் மாநகரில் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- முன்விரோதம் காரணமாக பிரபாகரன் என்பவரை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பீா் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றனா்.
- திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் முன்விரோதம் காரணமாக பிரபாகரன் என்பவரை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பீா் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றனா்.
இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சோ்ந்த எஸ்.சுபாஷ், திருப்பூா் கோவில்வழியைச் சோ்ந்த ஆா்.ரவி (23) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த இருவரும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நல்லூா் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.
- நவம்பா் 11-ந் தேதி வி.சந்தோஷ், நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் பணத்தை பறித்துச்சென்றனா்.
- 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
திருப்பூர் :
திருப்பூா் வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் வி.சந்தோஷ். இவா் கடந்த நவம்பா் 11-ந் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் அவரை தூக்கிச் சென்று பணத்தை பறித்துச்சென்றனா். இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக திருப்பூா் காந்திநகரை சோ்ந்த எஸ்.சூா்யா (25), சாமுண்டிபுரத்தை சோ்ந்த நவீன்குமாா் (24), எஸ்.கோகுல்(19) ஆகிய 3 பேரை கடந்த நவம்பா் 28-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் சூா்யா மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, 8 வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சூா்யாவை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூா்யாவிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.
- மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கமலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தென்காசி:
தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த துரையரசு என்பவரின் மகனான கமல் (வயது27) என்ற நபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார்.
அதையேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சமர்பித்தார்.மேலும் கமல் என்பவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2017 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்