search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foundation Stone Laying Ceremony"

    • பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • கட்டிட பணிக்கான அடிக்கல்லை சிவபத்பநாதன் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.9.13 லட்சத்தில் பகுதி நேர ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கட்டிட பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஒன்றிய பிரதிநிதி அரிச்சந்திரன், பொருளாளர்துரை, கிளைச் செயலாளர்கள் சமுத்திரபாண்டி,செல்வராஜ், ராஜேந்திரன், பொன்னுத்துரை, கே.செல்வராஜ், ஊராட்சி உறுப்பினர் தங்கராஜ் மற்றும் அருணாசலம், கருப்பசாமி, பாலச்சந்திரன், கணேசன், மாரிச்செல்வம், பாலகுமார், முருகேசன், கணபதி நாடார், பலவேசம் நடராஜன், கண்ணன், கதிர்குமார், மகேஷ், கோபால்,மாரிச்செல்வன், மகேஷ்வரன், நவீன் கிருஷ்ணன், ஆனந்த், ரேவதி, முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
    • கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் அடிக்கல்லை நாட்டினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி மன்ற செயலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலை செல்வி, துணை சேர்மன் கலா, துணைத் தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திர சேகரன் அடிக்கல் நாட்டி னார். திருமலை குமார் நன்றி உரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஷாகிரா பானு, கால்நடை மருத்துவர் சிவக்குமார், சாலை ஆய்வாளர் சிவகுமார், தலைமை ஆசிரியர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் கரடி முத்து, ராஜசேகர், ராஜம்மாள், மீனா, கலா, மகேஸ்வரி, இசக்கியம்மாள், கண்ணம்மாள், முன்னாள் பொதுப்பணி குமார், ஒப்பந்ததாரர் சீதாராமன், சுபாஷ், மக்கள் நல பணியாளர்கள் சீனி யம்மாள், ஆப்ரேட்டர்கள் மதிவாணன், கண்ணன், முருகன், பாலகிருஷ்ணன் கிளாங்காடு முத்து, கிருஷ்ண சாமி அருணாச்சலம், மாரியப்பன், வயல் காட்டு காலனி சுடலை, ராமர், கற்குடி சுரேஷ், ராஜ்குமார் கிளாங்காடு ராமர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×