search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharna strike"

    • மருத்துவ அறிக்கை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் புகார் அளித்தனர்.

     கோவை,

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்குள் புகுந்து, அங்கு பணியாற்றிய நர்சுகளை மிரட்டிய மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு ஆஸ்ப த்திரி வளாகம் முன்பு 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இன்று காலை திடீர் தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சையின் போது இறந்து விட்டார்.

    இது தொடர்பான மருத்துவ அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வினோத் என்பவர் 5 பேருடன் சம்பவத்தன்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர் நேராக கர்ப்பிணிகள் வார்டுக்குள் சென்று, அங்கிருந்தவர்களை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணியாற்றிய நர்சுகள் கேட்ட போது, அவர்களை மிரட்டியுள்ளார்.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரிகளிடம் டாக்டர்கள் புகார் அளித்தனர்.

    ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிைறவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராம பட்டினம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராம பட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன .அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் , குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு இன்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி, கவுரி, கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். பாஸ்கர் பாபு தொடக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×