என் மலர்
நீங்கள் தேடியது "delhi hospital"
- கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர்.
- ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சொகுசு காரில் சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை தடுப்பில் வேகமாக மோதி தீப்பிடித்தது.
கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியே குதித்து உயிர் தப்பினார். விபத்தில் அவருக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்துள்ளது. நெற்றி, மணிக்கட்டு, கணுக்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. முகத்தில் உள்ள காயத்தை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பில் ஸ்கேன் செய்ததில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷப் பண்ட்டின் பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறும் போது, ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுகிறது. முழங்காலில் உள்ள தசை நார் காயத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
அவர் விரைவில் டெல்லி அல்லது மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கு அடுத்த சிகிச்சை முறை முடிவு செய்யப்படும் என்றார்.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர். ஹரித்துவாரில் இருந்து பானிபட் நோக்கி சென்ற பஸ்சை சுஷில்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.அதில் கண்டக்டராக பரம்ஜித் என்பவர் இருந்தார்.
ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதை பார்த்ததும், சுஷில்குமார், பரம்ஜித் இருவரும் பஸ்சை நிறுத்தி விட்டு காரை நோக்கி சென்றனர். அவர் கள் ரிஷப் பண்டை காரில் இருந்து வெளியேற உதவி செய்து மீட்டனர்.
ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மாநில சாலைத்துறை பாராட்டி உள்ளது.
- இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு.
- கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.
டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும் எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.
5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடரபாக உரிமையாளர் கைது செய்யப்பட் நிலையில் மருத்துவமனை இயக்குனராக டாக்டர் நவீன் கிச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
- சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை.
டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வரவிருக்கும் தேர்தலில் தனது புது டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், முதல்வர் அதிஷி தனது கல்காஜி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இன்று அறிவித்துள்ளது.
தேசிய தலைநகரில் தனது கட்சி ஆட்சியை தக்கவைத்தவுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இப்போது உங்களை கவனித்துக் கொள்வது எங்கள் கடமையாகும். நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையாக உழைத்துள்ளீர்கள்.
சிகிச்சைச் செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு பதிவுக்கு வருவார்கள். கார்டு தருவார்கள், பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும்" என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தரம்சாலா நகரில் வசித்து வருகிறார். #DalaiLama






