என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi hospital"

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர்.
    • ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு சொகுசு காரில் சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை தடுப்பில் வேகமாக மோதி தீப்பிடித்தது.

    கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் வெளியே குதித்து உயிர் தப்பினார். விபத்தில் அவருக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்துள்ளது. நெற்றி, மணிக்கட்டு, கணுக்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. முகத்தில் உள்ள காயத்தை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

    ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மூளை மற்றும் முதுகெலும்பில் ஸ்கேன் செய்ததில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரிஷப் பண்ட்டின் பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறும் போது, ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுகிறது. முழங்காலில் உள்ள தசை நார் காயத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

    அவர் விரைவில் டெல்லி அல்லது மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கு அடுத்த சிகிச்சை முறை முடிவு செய்யப்படும் என்றார்.

    கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை பஸ் டிரைவர், கண்டக்டர் உதவி செய்து காப்பாற்றினர். ஹரித்துவாரில் இருந்து பானிபட் நோக்கி சென்ற பஸ்சை சுஷில்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.அதில் கண்டக்டராக பரம்ஜித் என்பவர் இருந்தார்.

    ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதை பார்த்ததும், சுஷில்குமார், பரம்ஜித் இருவரும் பஸ்சை நிறுத்தி விட்டு காரை நோக்கி சென்றனர். அவர் கள் ரிஷப் பண்டை காரில் இருந்து வெளியேற உதவி செய்து மீட்டனர்.

    ரிஷப் பண்டுக்கு உதவிய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாநில அரசு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மாநில சாலைத்துறை பாராட்டி உள்ளது.

    • இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு.
    • கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும் எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் தொடரபாக உரிமையாளர் கைது செய்யப்பட் நிலையில் மருத்துவமனை இயக்குனராக டாக்டர் நவீன் கிச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
    • சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை.

    டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வரவிருக்கும் தேர்தலில் தனது புது டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், முதல்வர் அதிஷி தனது கல்காஜி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இன்று அறிவித்துள்ளது.

    தேசிய தலைநகரில் தனது கட்சி ஆட்சியை தக்கவைத்தவுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "இப்போது உங்களை கவனித்துக் கொள்வது எங்கள் கடமையாகும். நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையாக உழைத்துள்ளீர்கள்.

    சிகிச்சைச் செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு பதிவுக்கு வருவார்கள். கார்டு தருவார்கள், பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும்" என்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. #DalaiLama
    புதுடெல்லி:

    திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா(வயது 83), டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்றார். ஏப்ரல் 6-ம் தேதி மாநாடு முடிவடைந்தது. அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை தரம்சாலா சென்றார். அங்கு சென்றதும் உடல்நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, நேற்று மீண்டும் டெல்லி திரும்பினார்.



    டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தரம்சாலா நகரில் வசித்து வருகிறார். #DalaiLama
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 31-ம் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து டெல்லியில் இருந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார் என தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    ×