search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check up"

    • கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் பரி பேதுரு ஆலய வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் பரி பேதுரு ஆலய வளாகத்தில் கடையம் பாரதி அரிமா சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், டாக்டர் அகர்வர்வால் கண் மருத்துவமனை மற்றும் தென்காசி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பெடரல் வங்கி கிளை மேலாளர் பொன்னம்மாள், கடையம் பாரதி அரிமா சங்க தலைவர் அரிமாகாளிதாஸ், ஆசீர்வாதபுரம் ஆசீர் மோசஸ்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமில் தென்காசி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் பாரதிராஜன், பாத்திமா, அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் மாணிக்கம் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் கண் பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் கேன்சர் விழிப்புணர்வு படக்காட்சி ஒளிபரப்பபட்டது. முகாமில், கடையம் பாரதி அரிமா சங்க செயலாளர் அரிமா தயாள லெட்சுமணன், பொருளாளர் அரிமா கோபால், அரிமாகுமரேசன், அரிமா இந்திரஜித், அரிமா முருகன், அரிமா இளங்கோ, ஏ அரிமா அழகுதுதுரை, அரிமா அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    • முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார்.
    • இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கங்கைகொண்டான் வடகரை புனித ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் ஆ.க.மணி, யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் மாலதி செல்லத்துரை, கிளைச்செயலாளர் செல்லத்துரை, கங்கை சின்னத்துரை, துரை, மகாராஜன், செல்வி, ராமசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. #DalaiLama
    புதுடெல்லி:

    திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா(வயது 83), டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்றார். ஏப்ரல் 6-ம் தேதி மாநாடு முடிவடைந்தது. அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை தரம்சாலா சென்றார். அங்கு சென்றதும் உடல்நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, நேற்று மீண்டும் டெல்லி திரும்பினார்.



    டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தரம்சாலா நகரில் வசித்து வருகிறார். #DalaiLama
    ×