search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut Auction"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் முதல் தரம் ரூ.71 முதல் ரூ.81 வரையிலும், 2-ம் தரம் ரூ.56 முதல் ரூ.67 வரையிலும் விலை போனது. மொத்தம் 75 மூட்டைகள் ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த விவசாயிகள் 3,700 தேங்காயை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் ஒரு காசுக்கும், அதிகபட்சமாக 25 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 1, 655 கிலோ எடை உள்ள தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    • விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது.

     வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை முத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்த வாரம் 3 விவசாயிகள் தேங்காயும், 2 விவசாயிகள் தேங்காய் பருப்பும் கொண்டு வந்திருந்தனர்.

    விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ 22.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 21.40 ரூபாய்க்கும், சராசரி 21.80 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 ஆயிரத்து 400 க்கு ஏலம் போனது. இது போல வாரந்தோறும் நடைபெறும் கொப்பரை ஏலத்தில் 350 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. இந்த ஏலத்தில் 2 விவசாயிகள் பங்கேற்றனர்.

    வழக்கமாக இங்கு நடைபெறும் ஏலத்திற்கு குறைந்தது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உரிக்க முடியாமலும், தேங்காய் பருப்புகளை வெயிலில் காயவைக்க முடியாத காரணத்தால் 5 விவசாயிகள் மட்டும் ஒழுங்குமுறை கூடத்திற்கு விற்பனை செய்ய வந்திருந்தனர்.

    • கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது.
    • மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் கொடு முடி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 3,300 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 66 காசுக்கும், அதிக பட்ச விலையாக 25 ரூபாய் 80 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 5 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 27 ஆயிரத்து 98 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதேபோல் தேங்காய் பருப்பு 162 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலை யாக 82 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 12 காசுக்கும் ஏலம் போனது.

    இதே போல் இரண்டாம் தரம் குறைந்த பட்ச விலையாக 60 ரூபாய் 89 காசுக்கும், அதிக பட்ச விலையாக 80 ரூபாய் 20 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 6,992 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 901 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு என மொத்தம் ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,640 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 50 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 75 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 775 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18,428-க்கு விற்பனை ஆனது.

    • சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 987 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 654 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,492 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 6 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 987 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 654 ரூபாய்க்கு விற்பனையானது.

    • கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×