search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone Ban"

    • பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
    • 11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப் பட்டுள்ளார்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் மலைக்கோவிைல படம் பிடிப்பதுடன் மூலவருக்கு நடைபெறும் பூஜைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத ளங்களில் வெளியிட்டு வந்தனர்.

    இதனையடுத்து மலை க்கோவிலில் செல்போன், கேமரா பயன்படுத்துவை தடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க அடிவாரம், படிப்பாதை பகுதியில் மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து செல்போன் வாங்கப்பட்டது.

    இதனால் மலைக்கோவிலில் செல்போன் பயன்பாடு பெரும்பாலும் குறைந்தது. இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் வரும் நபர் காணாமல் போய்விட்டால் அவரை கண்டுபிடிக்க, தொடர்பு கொள்ள சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை போக்கும் வகையில் படிப்பாதை முதல் மலைக்கோவில் வரை 4 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்ப ட்டது. அங்கு ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்து வருகிறார். தற்போது மேலும் சில இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப்பட்டுள்ளார். பக்தர்களுக்கு தேவைப்படும் உதவியை அவரிடம் தொடர்பு கொண்டு தெரி வித்தால் அதனை நிறை வேற்றி வருகின்றனர். இந்த நடைமுறை பக்தர்களி டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    • மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
    • பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மலைக்கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த கல்வியாண்டில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், இளைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் சிலர் மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வந்தது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும் இன்று முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளது. மேலும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்புபயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதவிநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை என்பதால் அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.

    • பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு
    • கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக நடவடிக்கை

    தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் தடையை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். 


    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை உள்ளது. செல்போன்களுடன் செல்லும் பக்தர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான லாக்கர்களில் செல்போனை வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×