search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-Drug Awareness"

    • போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.

    உடுமலை :

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். புகையிலை மற்றும் போதையினால் ஏற்படும் இன்னல்களை எடுத்துக் கூறி அவற்றை கைவிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்1 நீதிபதி விஜயகுமார் மற்றும் எண் 2 நீதிபதி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புகையிலை மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உரையை மித்ரா மற்றும் சூர்யா ஆகியோர் மக்களுக்கு எடுத்துக்கூறினர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • லாரன்ஸ் மற்றும் தாளாளர் ஹெலன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகளைக் கூறினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிறுவனத் தலைவர் பொறியாளர் லாரன்ஸ் தலைமையில், தாளாளர் ஹெலன் மற்றும் கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி நூலகர் சாரதாதேவி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு போதை பொருள்கள் பற்றியும், அதனால் ஏற்படுகின்ற தீமைகள் பற்றியும் பேசினார்.

    கல்லூரி தலைவர் பொறியாளர். லாரன்ஸ் மற்றும் தாளாளர் ஹெலன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகளைக் கூறினார். முடிவில் மாணவிகளும், ஆசிரியைகளும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியை ரெஜினா நன்றி கூறினார்.

    • போடி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    போடி:

    ரூடாட் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போடி அருகே சில்லமரத்துபட்டியில் நடந்தது. இதற்கு தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினார். போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போதை பொருட்களை ஒழிப்போம், மனித மாண்பை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு பள்ளி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செல்வி பரணி வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் குழந்தை வள்ளி, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மாற்று திறனாளிகளுக்கான அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா பெற்றோருக்கான சுய உதவி குழுக்களை தொடங்கி வைத்தார். போடி இந்தியன் வங்கி கிளை உதவி மேலாளர் அருண் மாற்றுத் திறனாளிகளின் வங்கி கணக்கை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் தீபக் குமார், முத்துப்பாண்டி, ஜோதிப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
    • இதில் இளைஞர்களுக்கு போதைபொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக போதைக்கு எதிரான முயற்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி அனைவரையும் வரவேற்றார்.

    பதிவாளர் சிவக்குமார் தலைமை விருந்தினரை பாராட்டி சால்வை மற்றும் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள் இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மாணவர்கள் போதைப் பொருள் இல்லாத வாழ்க்கையை உருவாக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான தேசத்தை கட்டி எழுப்ப அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர்.
    • பாிசுக்கோப்பைகளை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் .

    மங்கலம் :

    மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடி போட்டியானது மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் மங்கலம் -அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுக்கோப்பை , பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் . இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வகுமார் ,செந்தில்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ ,மாணவிகள் மங்கலம் போலீசார் கலந்து கொண்டனர்.

    • போடியில் சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தேசியக்கொடி போன்று மூவர்ணக் தொப்பி சீருடை அணிந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சிசம் பள்ளி சார்பாக 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேசியக்கொடி போன்று மூவர்ணக் தொப்பி சீருடை அணிந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை போடி டி.எஸ்.பி. சுரேஷ் தீபச் சுடர் ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பகத்சிங், பாரதியார், போன்ற உருவ முகமூடி அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    பல்வேறு மாணவர்கள் சிலம்பம், சுருள்பட்டா, வாள் வீச்சு, வேல் கம்பு சுழற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளிலும் ஸ்கேட்டிங் விளையாட்டுகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    ஜெய்ஹிந்த்,வந்தே மாதரம் முழக்கங்களுடன் போதையை ஒழிப்போம் தேசத்தை காப்போம் என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    • போதை பொருட்களால் வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.
    • பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம், ரோட்டரி பல்லடம் ரெயின்போ சங்கம், ஆகியவை இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கமலம் வரவேற்றார்.

    கருத்தரங்கில், பல்லடம் எஸ்.வி.கிளினிக் தலைமை டாக்டர் பாலமுரளி கலந்துகொண்டு பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். எனவே போதை பொருட்களை தவிர்த்து விடுங்கள்,மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், போதை பழக்கத்தில் இருந்தால், அவரை திருத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

    ×