search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நீதிமன்ற வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
    X
    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

    உடுமலை நீதிமன்ற வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

    • போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.

    உடுமலை :

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். புகையிலை மற்றும் போதையினால் ஏற்படும் இன்னல்களை எடுத்துக் கூறி அவற்றை கைவிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்1 நீதிபதி விஜயகுமார் மற்றும் எண் 2 நீதிபதி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புகையிலை மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உரையை மித்ரா மற்றும் சூர்யா ஆகியோர் மக்களுக்கு எடுத்துக்கூறினர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×