search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.

    போடி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • போடி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    போடி:

    ரூடாட் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போடி அருகே சில்லமரத்துபட்டியில் நடந்தது. இதற்கு தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினார். போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போதை பொருட்களை ஒழிப்போம், மனித மாண்பை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு பள்ளி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செல்வி பரணி வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் குழந்தை வள்ளி, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மாற்று திறனாளிகளுக்கான அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா பெற்றோருக்கான சுய உதவி குழுக்களை தொடங்கி வைத்தார். போடி இந்தியன் வங்கி கிளை உதவி மேலாளர் அருண் மாற்றுத் திறனாளிகளின் வங்கி கணக்கை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் தீபக் குமார், முத்துப்பாண்டி, ஜோதிப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×