search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance service"

    • நீதிமன்ற அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களின் அவசர மருத்துவச் சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • இந்த சேவை உங்கள் அனைவர்களோடு ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு வழக்கறிஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும்நீதிமன்ற ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலுகார்த்திகேயன், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமர்சிங்.

    தஞ்சை வடக்கு அஞ்சல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

    இங்கு 1 ஆம்புலன்ஸ் மற்றும் 1 இருசக்கர மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீதிமன்ற அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களின் அவசர மருத்துவச் சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு மனிதனின் பாதுகாப்பிற்காக மட்டும்தான் இங்கு மருத்துவச் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவை உங்கள் அனைவர்களோடு ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    முடிவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மதுரை மண்டல கமிட்டி உறுப்பினர் சுகதேவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாள் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில தலைவர் வரதராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், கல்குறிச்சி, சத்திரப்பட்டி, விருது நகர், சிவகாசி தீயணைப்பு நிலையம், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய 6 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதில் பணியாற்றிய ஊழியர்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர காலங்களில் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதற்கு காரணமான விருதுநகர் மாவட்ட ஜி.வி.கே. - ஈ.எம்.ஆர்.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
    • பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 102 ஆம்புலன்ஸ் தாய் சேய் நல இலவச சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

    பிரசவ சிகிச்சை முடிந்து தாய்மார்கள் வீடு திரும்புவதற்காக தாய் சேய் நல சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருக்கும். அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும், குழந்தைகளையும் கொண்டு விடவும் மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய் சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து இல்லங்களுக்கு அழைத்து செல்வதற்கும் இலவச வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த வாகனத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும்.அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து இந்த வாகனம் அனுப்பி வைக்கப்படும். பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான ஒரு தொட்டில் தாய் உறவினர்கள் அமர்ந்து செல்லும் வகையில் 7 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசவித்த தாய்மார்களை இல்லங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமின்றி பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அழைத்து சென்று வரவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த புதிய சேவையில், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவார்கள்.
    மதுரா:

    கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், உயிரிழக்கும் கொடூரம் நடைபெறுகிறது. இதனால், நோய்வாய்ப்பட்ட மாடுகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய ஆம்புலன்ஸ் சேவையை உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சவுத்ரி லட்சுமி நரேன் கூறியதாவது:-

    மாடு நோய்வாய்ப்பட்டால், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாடுகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக, ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவையின் மூலம், மாடுகளின் உயிர் காக்கப்படும்.

    அடுத்த மாதம் தொடங்க உள்ள இத்திட்டத்தின் கீழ், 112 அவசர சேவை எண் வழங்கப்படுகிறது. மேலும், புகார்களை தெரிவிக்க லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும். அவசர எண்ணை அழைத்ததும், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவார்கள்.

    இத்திட்டத்தை மதுரா உள்பட எட்டு மாவட்டகளில் சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. இந்த சேவைக்காக , 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன.

    இதைத்தவிர, இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பம் வழங்குவதன் மூலம் மாநிலத்தின் இன மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும். இது மலட்டு மாடுகளை கூட அதிக பால்  தரும் உயிரினமாக  மாற்றும். அதனால், கரு மாற்று தொழில்நுட்பம் மாநிலத்தில் ஒரு புரட்சியான திட்டமாக இருக்கும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ×