search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள்.

    24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

    • விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மதுரை மண்டல கமிட்டி உறுப்பினர் சுகதேவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாள் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில தலைவர் வரதராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், கல்குறிச்சி, சத்திரப்பட்டி, விருது நகர், சிவகாசி தீயணைப்பு நிலையம், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய 6 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதில் பணியாற்றிய ஊழியர்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர காலங்களில் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதற்கு காரணமான விருதுநகர் மாவட்ட ஜி.வி.கே. - ஈ.எம்.ஆர்.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×