என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Allan Border"
- என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது.
- ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை.
புதுடெல்லி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 18 விக்கெட் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். கபில்தேவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த நிலையில் பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார். அவர் மிகவும் வித்தியாசமானவர்.
விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
ஆசியாவுக்கு வெளியே அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டவர் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் 3 முறையும், தென் ஆப்பிரிக்காவில் 3 முறையும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் தலா 2 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்னில் பெற்ற வெற்றியால் இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது.
நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க உள்ளது என்றும் வெற்றிக்கு தகுதியான அணி என்றும் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டினர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் இந்திய அணியை பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-
நம்பர் 1 அணியாக உள்ள இந்தியா தற்போது அதற்கு ஏற்றாற்போல் விளையாடி வருகிறது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களது ஆட்டத்தை பார்க்க சிறப்பாக இருக்கிறது.
முன்பு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி திணறி வந்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்திய அணி நல்ல வேகப்பந்து வீச்சை பெற்று இருப்பதுதான். அற்புதமான வேகப்பந்து குழுவுடன் ஒன்றிணைந்து உள்ளது.
நான் பார்த்ததிலேயே இதுதான் நல்ல இந்திய வேகப்பந்து வீச்சு குழு. மேலும் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். பேட்டிங்கும் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாட்டில் உள்ள வேகப் பந்துக்கு சாதகமாக ஆடு களங்களை போன்று இந்தியாவிலும் அமைப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு கவாஸ்கர்- பார்டர் கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.
![](http://admin.maalaimalar.com/uploads/uumwe6oa.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812211051256784_2_3k6j5u79._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812211051256784_3_074iti4l._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812211051256784_4_a6mhuvpm._L_styvpf.jpg)
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-
![](https://img.maalaimalar.com/InlineImage/201812211051256784_5_w6kil3a5._L_styvpf.jpg)
பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
இந்நிலையில், ‘‘மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளருடன் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். இதேபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் தேர்வாளர்களின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும்’’ என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805181851242938_1_maxwell001-s._L_styvpf.jpg)
தற்போது பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லிற்கு இடம் கிடைக்கலாம்.