என் மலர்
செய்திகள்

X
கோலியின் ஆக்ரோஷம் கிரிக்கெட்டுக்கு தேவை - ஆலன் பார்டர் சொல்கிறார்
By
மாலை மலர்21 Dec 2018 10:51 AM IST (Updated: 21 Dec 2018 10:51 AM IST)

மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார். #ViratKholi #AUSvIND #AllanBorder
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.




இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-

பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.
பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் பேசி கொண்டனர். நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.

கோலியின் ஆக்ரோஷ செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதுபோன்று முன்னாள் வீரர்கள் சிலரும் கண்டித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை. தனது அணி விக்கெட்டை வீழ்த்தியதும் கேப்டனாக கோலி வெளிபடுத்தும் உணர்ச்சியை வேறு எந்த கேப்டனிடமும் இருந்தும் நான் பார்த்ததில்லை.

அது உண்மையில் அதிகமானதுதான். ஆனால் அவர் சரியான பாதையில் செல்கிறார். தற்போது கோலியை போன்று குணாதிசயம் கொண்டவர்கள் கிரிக்கெட்டில் நிறையபேர் இல்லை. ‘நம்பர் ஒன்’ இருக்க நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து ஒரு கேப்டனாக அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-
விராட் கோலி மிகவும் உணர்ச்சிமிக்க வீரராக இருக்கிறார். இதனால் தான் மைதானத்தில் அவரிடம் இருந்து ஆக்ரோஷத்தை நீங்கள் பெறுகிறீர்கள்.

அவர் சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார். எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார். தான் மட்டுமல்ல தனது நாடும் வெற்றி பெற வேண்டும் என்றே கருதுகிறார்.
பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
Next Story
×
X