search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hall ticket"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது
    • 1983ல், ஜபல்பூர் பல்கலைக்கழகம் "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" என பெயர் மாற்றப்பட்டது

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜபல்பூர் (Jabalpur) நகரம்.

    99.63 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது.

    இப்பல்கலைக்கழகம், 1983ல், "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" (Rani Durgavati Vishwavidyalaya) என பெயர் மாற்றப்பட்டது.

    சுமார் 20 நாட்களுக்கு முன்னர், முதுநிலை கணினி அறிவியல் (M.Sc Computer Science) படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.

    நேற்று முன் தினம் (மார்ச் 5) நடைபெறுவதாக இருந்த இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது.

    இதையடுத்து தேர்விற்காக 20 நாட்களுக்கும் மேலாக படித்து வந்த மாணவர்கள், மார்ச் 5 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தனர். ஜபல்பூரை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல மாணவர்கள் அதிகாலையிலேயே புறப்பட்டு ஜபல்பூர் வந்திறங்கி, பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு வந்தனர்.

    ஆனால், அங்கு தேர்விற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாதது கண்டு அதிர்ந்த மாணவர்கள், இது குறித்து பேராசிரியர்களிடமும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேர்வு ஏதும் இல்லை என்றும், கேள்வித்தாள் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இப்பதிலால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கள் கண்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை வேந்தர் சந்தித்தார்.

    இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். கே. வர்மா, "தேர்வாணையர், (exam controller) தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த தகவலை மாணவர்களுக்கு முறைப்படி தெரிவிக்க அதிகாரிகளும், பேராசிரியர்களும் தவறி விட்டனர். யார் இச்சம்பவத்திற்கு பொறுப்பு என கண்டறிய ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய மாணவர் சங்க (National Students' Union of India) தலைவர் சச்சின் ரஜக், "பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தையும் கவனக்குறைவையுமே இது காட்டுகிறது. ஒரு தேர்விற்கான கால அட்டவணையையும் தேர்விற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் எவ்வாறு மறக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

    • தேர்வை உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரியம் நடத்துகிறது
    • சம்பந்தப்பட்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்தது

    நேற்று, உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வு, அம்மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில், உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரிய (UP Police Recruitment and Promotion Board) வலைதளத்தில் பதிவாகிய "12258574" எனும் எண் கொண்ட ஒரு அனுமதி சீட்டில், பிரபல இந்தி திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையின் சைபர் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

    முதற்கட்ட விசாரணையில், கன்னோஜ் (Kannauj) பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட இந்த அனுமதி சீட்டு போலியானது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    அந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களும் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள செல்போன் எண், மகோபா (Mahoba) பகுதியில் உள்ள தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது எண் என விசாரணையில் தெரிகிறது.

    இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

    சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த அனுமதி சீட்டின் புகைப்படத்தை கண்டு பயனர்கள் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
    • ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 106 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 1,484 பேர் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.

    கடந்த 22ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான (அறிவியல்) செய்முறைத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.
    • இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு ‘லிஸ்ட்’ அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்விலும் வழக்கமாக 3 முதல் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன் தினம் தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொது தேர்வை அதுவும், தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் பரீட்சை எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பிளஸ்-2 படித்து வந்தனர்.

    மீதம் உள்ள மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் பிளஸ்-2 வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.

    இந்த மாணவர்களை இடைநிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும்.

    இதை மறைக்கவே இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு 'லிஸ்ட்' அனுப்பி உள்ளனர்.

    அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் 'ஹால் டிக்கெட்' பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி 'ஆப்சென்ட்' பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

    மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரியாக வராத இவர்கள் பரீட்சைக்கும் வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் 'ஆல் பாஸ்' நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு நடைபெறுவதால் பல மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதுபற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்தபட்சம் இவ்வளவு என்று இருக்க வேண்டும். பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க வேண்டும்.

    ஆனால் எதுவும் செய்வதில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கே வராத மாணவர்களையும் படிப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இது தவறு. அரசு பள்ளியின் பாலிசியை மாற்ற வேண்டும், என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டதற்கு மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரிய படுத்தப்படும் என்றும் கூறினார்.

    • தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், பி.எப்.சி., எம்.எஸ்.சி. விலங்கியல், மற்றும் அது சம்பந்தமாக படித்த இளநிலை , முதுநிலை பட்டதாரிகள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சேலம்

    இந்த நிலையில் மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 8-ந்தேதி காலை மற்றும் மதியம் என 2 ஷிப்டுகளாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜயயாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இதில் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.


    ஹால் டிக்கெட்

    இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. #TNPSC #GroupII
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி-2(நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 பதவிகள்) பணிக்கான முதல்நிலை தேர்வினை வருகிற 11-ந்தேதி சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் நடத்த உள்ளது.

    இந்த தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(‘ஹால் டிக்கெட்’) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnps-c-ex-ams.net, tnps-c-ex-ams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

    நுழைவுச்சீட்டினை(ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contact tnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

    மேற்கண்ட தகவல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் பணியில் அடங்கிய உதவி ஆணையர் தொழிலாளர் பதவிக்கான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 5 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    10, பிளஸ்-2 துணைதேர்வு எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 17-ந்தேதி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்விதுறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 துணைதேர்வு எழுத அரசு தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் நுழைவு சீட்டு என்பதனை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வு கூட அனுமதிசீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகைதர வேண்டும்.

    இதேபோல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள 10-ம்வகுப்பு துணைத்தேர்வு எழுத அரசுதேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுகூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வு கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×