என் மலர்
நீங்கள் தேடியது "சியோமி 12"
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் சியோமி 12 அல்ட்ரா 50 எம்பி பிரைமரி கேமரா, அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக சியோமி 12 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் லோகி மற்றும் தார் எனும் குறியீட்டு பெயர்களில் இரு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

சியோமி 12 அல்ட்ரா மாடலில் 50 எம்பி சாம்சங் ஜி.என்.5 சென்சாருன் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இத்துடன் 2எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா, 5 எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.
அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.

படம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,
கே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது தான் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.
படம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath
கே 13 படத்தின் டீசர்:
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கே 13' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #K13 #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Mystery Unveils on May 1st in your Favourites Cinemas#K13FromMay1@sankarsp007@arulnithitamil@ShraddhaSrinath@dir_barath@kisham77@narentnb@AntonyLRuben@AravinndSingh@SamCSmusic@adhikravi@ur_rameshthilak@VijayVzOfficial@iYogiBabupic.twitter.com/EhDbgyFk8Y
— SP CINEMAS (@thespcinemas) April 19, 2019
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இந்த படத்தை தயாரித்துள்ளனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
#K13 Teaser Countdown Starts !
— SP CINEMAS (@thespcinemas) March 10, 2019
Director @Adhikravi 👍 #K13Diaries@sankarsp007@arulnithitamil@ShraddhaSrinath@dir_barath@kisham77@narentnb@AntonyLRuben@AravinndSingh@ur_rameshthilak@VijayVzOfficial@DoneChannel1pic.twitter.com/rOse7sMkBh
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஜ்பாய் படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
மைக்ரமேக்ஸ் நிறுவனம் என்11 மற்றும் என12 என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #MicroMax #Smartphones
மைக்ரோமேக்ஸ் இன்ஃபோமேடிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 மற்றும் இன்ஃபினிட்டி என்12 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏ.ஐ. வசதி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்12 சிறப்பம்சங்கள்:
- 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 சிறப்பம்சங்கள்:
- 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என்றும், இன்ஃபினிட்டி என்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வொய்லா, புளு லகூன் மற்றும் வெல்வெட் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றின் விற்பனை டிசம்பர் 26ம் தேதி முதல் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும். புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் புதிய வாட்ச், ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் மென்பொருள்களான ஐ.ஓ.எஸ்., வாட்ச் ஓ.எஸ். உள்ளிட்டவற்றின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. #appleEvent2018
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 நிகழ்வு ஆப்பிள் வாட்ச், புதிய ஐபோன் மாடல்களைத் தொடர்ந்து ஐ.ஓ.எஸ். 12, ஹோம்பாட் மற்றும் டி.வி. ஓ.எஸ். 12, வாட்ச் ஓ.எஸ்., மேக் ஓ.எஸ். மோஜேவ் உள்ளிட்டவற்றின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக புதிய இயங்குதளங்கள் ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதளங்கள் செப்டம்பர் 17-ம் தேதி முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேக் ஓ.எஸ். மோஜேவ் வெளியீடு செப்டம்பர் 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 12, தவிர ஹோம் பாட், டி.வி.ஓ.எஸ். 12 அட்மாஸ் மற்றும் வாட்ச் ஓ.எஸ். 5 அப்டேட் செப்டம்பர் 17-ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் ஓவர்-தி-ஏர் முறையில் கிடைக்கும் என்றும் பயனர்கள் இதனை இலசமாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்தது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.
புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் ஆக்டிவிட்டி ஷேரிங், ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன், யோகா மற்றும் ஹைக்கிங், வாக்கி டாக்கி, பாட்கேஸ்ட், மேம்படுத்தப்பட்ட சிரி, ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன் போன்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.
சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay
சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath
ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமான ‘யு டர்ன்’ என்ற கன்னடப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘விக்ரம் வேதா’ பெரிய ஹிட்டாக, மறுபடியும் மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.

எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. “முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. திடீரென்று தான் அது நிகழ்ந்தது. கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார் பரத் நீலகண்டன். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன்.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் அழகாகப் பிணைத்து அவர் வடிவமைத்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை திரில்லர் வகையில் சேர்க்க முடியாது. உளவியல் டிராமா என்று கூறலாம்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். #ShraddhaSrinath
`புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொர்ந்து அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.
இந்த நிலையில் பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளர். விக்ரம் வேதா, ரிச்சி படங்களுக்கு பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த ஷ்ரத்தா, அருள்நிதி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுதவிர மாதவன் ஜோடியாக மாறா என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.
#SPCinemas glad to have Lucky Charm Successful heroine @ShraddhaSrinath for our #Production No.2 starring @arulnithitamil and directed by @dir_barath@sankarsp007@kisham77@narentnb@DoneChannel1pic.twitter.com/F4Im2TqEn4
— SP Cinemas (@thespcinemas) July 13, 2018
எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi