search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Cinemas"

    பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath
    ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமான ‘யு டர்ன்’ என்ற கன்னடப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

    தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு வெளியான ‘விக்ரம் வேதா’ பெரிய ஹிட்டாக, மறுபடியும் மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    அதுமட்டுமின்றி, இந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பரத் நீலகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார்.



    எஸ்.பி. சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. “முதலில் இந்தப் படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் எதுவும் படக்குழுவுக்கு இல்லை. திடீரென்று தான் அது நிகழ்ந்தது. கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார் பரத் நீலகண்டன். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன்.

    இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார். ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் அழகாகப் பிணைத்து அவர் வடிவமைத்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை திரில்லர் வகையில் சேர்க்க முடியாது. உளவியல் டிராமா என்று கூறலாம்” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். #ShraddhaSrinath

    `புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
    அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொர்ந்து அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

    இந்த நிலையில் பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளர். விக்ரம் வேதா, ரிச்சி படங்களுக்கு பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த ஷ்ரத்தா, அருள்நிதி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுதவிர மாதவன் ஜோடியாக மாறா என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.
    எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

    `புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் நான்காவது முறையாக இணையவிருக்கிறார். #Arulnidhi
    அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

    இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். 
    இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக அருள்நதியுடன் டிமான்டி காலனி, ஆராது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

    கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வரும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
    அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இரவில் நடக்கும் மர்மங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

    அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

    இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கிறது. 



    அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Arulnidhi

    ×