என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில்கள்"

    • தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    இது தவிர எழும்பூர் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,

    "தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அங்கிருந்து முக்கிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக எந்தெந்த பகுதிகளுக்கு சேவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ் வசதி அளிக்கப்படுகிறது. 101 வழித்தடத்தில் கூடுதலாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றார்.

    • சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது
    • புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

     

    காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு செல்ல புறப்பட்டவர்கள் செய்வதறியாமல் திண்டாடினர்.

    சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மறுசீரமைப்பு பணி காரணமாக 5, 6-வது நடைமேடையில் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை (8 மணி நேரம்) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும்.

    இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதன் காரணமாக சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    * இன்று முதல் 18-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகள் முழுவதுமாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    * இன்று மற்றும் 15-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00. 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் நாளை முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    * செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.

    * தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.

    * ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை, கடற்கரை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.

    ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.

    * கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.

    * தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.

    * கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.

    * செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.

    * கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
    • கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.

    அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதம் ஏற்பட்டது.

    திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

    இதேபோல் கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது. மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரெயில் காலதாமதமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    • சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்.

    அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

    இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்கனவே 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் எளிதாக செல்ல முடிகிறது. இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்துள்ளது.

    ஆனால் கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் மற்றும் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்கள் இருந்தபோது கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் 10 முதல் 15 நிமிட வெளியில் இயக்கப்பட்டன. ஆனால் 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    4-வது வழித்தடம் அமைக்கும் பணியால் ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்துடன் பறக்கும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டோம். ஆனால் இப்போது 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்னர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால் பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் பறக்கும் ரெயில் நடைமேடைகளின் அகலமும் குறைந்துள்ளது. இது நெரிசலான நேரங்களில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    4-வது பாதை அமைக்கப்பட்ட போது கோட்டை ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களுக்கான நடைமேடை அகற்றப்பட்டது இதையடுத்து சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான புறநகர் விரைவு ரெயில்கள், விரைவு பாதைக்கு பதிலாக தற்போது மெதுவான பாதைகளில் இயக்கப்படுகின்றன.

    இதற்கு முன்பு செங்கல்பட்டு - எழும்பூர் - கடற்கரை வழித்த டத்தில் விரைவு பாதையில் விரைவு ரெயில் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதிகளில் இருந்து குறித்த நேரத்தில் சென்னைக்கு வேலைக்கு வர முடிந்தது. ஆனால் தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து.
    • கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    கும்மிடிப்பூண்டி - பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த 2 நாட்களிலும் 6 மணி நேரத்துக்கு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 25 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூல்பேட்டைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கு செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35 மணிக்கு செல்லும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, 12.40 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு செல்லும் ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.25 மணிக்கு செல்லும் ரெயில்கள், நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ரெயில் கோட்டம் தெரிவித்து உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.40, 11.35 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து மீஞ்சூருக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 11.56, மதியம் 1.43, 2.59 மணிக்கும், எண்ணூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.43 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணி ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்டிரலில் இருந்து காலை 5.40, 8.35, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இரவு 9 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதனால் இந்த 2 நாட்களிலும் காலை 8.05, 9, 9.30 மணிக்கு சென்டிரல்-பொன்னேரிக்கும், காலை 9.40, 9.58 மணிக்கு பொன்னேரி-சென்டிரலுக்கும், காலை 10.30, 11.35 மணிக்கு சென்டிரல்-எண்ணூருக்கும், காலை 11.03 மணிக்கு எண்ணூர்-சென்டிரலுக்கும், காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-மீஞ்சூருக்கும், காலை 10.34, மதியம் 12.24, 1.32 மணிக்கு மீஞ்சூர்-சென்டிரலுக்கும், காலை 10.28 மணிக்கு பொன்னேரி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை, 28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, நாளை காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×